உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்து முடிந்து இன்றுடன் 13 நாட்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை உள்ளூராட்சி சபைகளில் எந்த கட்சியும் அதிகாரத்தை ஸ்தாபிக்கவில்லை. எனினும் இதற்கு முன்னர் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் போது, தேர்தல் முடிந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெற்றி பெற்ற கட்சிகள் அதிகாரத்தை ஸ்தாபித்துள்ளன. இந்த நிலையில், நடந்த முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலைமையில், உள்ளூராட்சி சபைகளில் அதிகாரம் …
Read More »நாடு கடத்தப்பட்ட புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு விமான நிலையத்தில் நடந்தது?
இலங்கையில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த 46 வயதுடைய சாந்தரூபன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு 10 மணியளவில் இலங்கையை வந்தடைந்த இவரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் அகதிகள் பேரவையால் கே.எஸ். ரத்னவேல் என்ற சட்டத்தரணியை ஏற்பாடு செய்து, அவரை விமான நிலையத்திற்கு அனுப்பி , சாந்தரூபனின் குடும்பத்தாரை …
Read More »மணல் ஏற்றிய உழவியந்திரம் கைப்பற்றப்பட்டது!!
அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய உழவியந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளதென்று பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்றுமுன்தினம் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய உழவியந்திரம் கைப்பற்றப்பட்டது. சாரதியும் கைது செய்யப்பட்டார். சாரதியிடம் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவரை கிளிநொச்சி நிதிமன்றில் முற்படுத்ததுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பளை பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன
Read More »ரணிலுக்கு பிடித்த பேராசை! பகிரங்கமாக சொல்லும் மஹிந்த
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பேராசை பிடித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் நிராகரித்த பிரதமர் இன்னமும் அதிகாரத்தில் இருப்பதென்பது அதிக பேராசையினாலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள விகாரைக்கு சென்றிருந்த மஹிந்த, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். தேசிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில், சமகால எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் தனது நிலைப்பாட்டை சபாநாயகரிடம் அறிவிக்க வேண்டும் என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
Read More »கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! கொலையா தற்கொலையா?
கிளிநொச்சி – புதுமுறிப்புக்குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் நேற்றைய தினம் காணாமல் போனதாக பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி உரிமையாளரான 25 வயதான ப.டனுசன் என்ற இளைஞரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கிளிநொச்சியிலிருந்து, கிளிநொச்சி மேற்கு நோக்கி சென்ற போதே காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் …
Read More »ரணில் உற்பட மேலும் சில அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு….!!! மைத்திரியின் அதிரடி
அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் இன்று (வியாழக்கிழமை) பெரும்பாலும் மாற்றங்கள் நிகழலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, மங்கள சமரவீரவின் நிதியமைச்சு, கபீர் ஹரிமின் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு, மலிக் சமரவிக்ரமவின் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுக்களிலும் …
Read More »அவதானமாகப் பேசுங்கள்! டக்ளஸ் தேவானாந்தா வேண்டுகோள்
அரசியல்வாதிகளும், பொறுப்புவாய்ந்த ஊடகங்களும் மிக அவதானமாக செய்திகளையும், தகவல்களையும் வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தியதலாவ – பண்டாரவளை பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில் குண்டு வெடித்தது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானாந்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பேசிய போது, குறித்த சம்பவமானது கண்டிக்கத்தக்கதும், வருந்தத்தக்கதுமாகும். இது …
Read More »பதவிகளை இழக்கும் ஐ.தே.கட்சியின் இரண்டு அமைச்சர்கள்
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் இருவரின் அமைச்சுப் பொறுப்புகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் நாளைய அமைச்சரவை மாற்றத்தின் போது இவர்களின் அமைச்சுப் பதவிகளுக்கான பொறுப்பு நீக்கப்படவுள்ளது. அதற்குப் பதிலாக குறித்த அமைச்சர்கள் இருவரும் பொறுப்புகள் அற்ற சிரேஷ்ட அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்கள் இருவரும் வகித்த அமைச்சுப் பதவிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் அரசியல்வாதிகள் இருவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More »அமைச்சரவையில் அதிரடி மாற்றம்! இளம் உறுப்பினர்களுக்கு இன்ப அதிர்ச்சி
இரு பிரதான கட்சிகள் இணைந்து நடத்திச் செல்லப்படும் சமகால அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இன்று அல்லது நாளை இடம்பெறவுள்ளது. அதற்கமைய நிதி, சட்டம் மற்றும் ஒழுங்கு, நெடுஞ்சாலைகள், மீன்பிடி மற்றும் நீரியியல் வளங்கள், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அமைச்சுக்களில் மாற்றஙம் ஏற்படுத்தவுள்ளதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த அமைச்சு பதவி அந்த கட்சிக்குள்ளேயும், சுதந்திர கட்சிக்கு கிடைத்த …
Read More »தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி நாளை இலங்கை வருகின்றார்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான 46 வயதுடைய சாந்தரூபன் தங்கலிங்கம் நாளை அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளார். 2012ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் தேடிய சாந்தரூபனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர் தற்போது குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார். சாந்தரூபனை இலங்கைக்கு நாடு கடத்தக் கூடாது, அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஐ.நா அகதிகள் ஆணையம் அவுஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை நிராகரித்த அவுஸ்திரேலியா, சாந்தரூபனை …
Read More »