அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விஷேட நேர்காணல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டின்மீது உண்மையான பற்றும் அன்பும் உள்ள ஒருவரும், யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த ஒருவரும், இராணுவத்தினரை பாதுகாக்கும் ஒருவரும், நாட்டில் கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஒருவரும், சுயநலமற்ற தூய்மையான அரசியலில் …
Read More »இலங்கையில் என்ன நடக்கிறது! சர்வதேசத்திற்கு மைத்திரி சொன்ன தகவல்
இலங்கையில் சமாதானமான சூழல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்த போது சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள், ஆணையாளர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறையான நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கண்டி மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஆரம்ப காரணமாக செயற்பட்டவர்களை கைது …
Read More »சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அமைச்சர் புதிய அறிவிப்பு
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராவதாக சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசிய போது அவர் குறித்த வலைத்தளங்கள் ஜெர்மன் மற்றும் பிரித்தானியாவில் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதை ஆராயுமாறு தம்மை பணித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இலங்கையில் பேஸ்புக், …
Read More »கண்டியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த இராணுவ தளபதி
கண்டி மாவட்டத்தில் திகன, அகுரன, ஹலகா, கடுகஸ்தொட, மெனிக்கின்ன, அபதென்ன, பூஜாபிடிய போன்ற இடங்களில் அண்மைக்காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டள்ளது. இந்த நிலையில் கலவரம் நடைபெற்ற இடத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக நேற்று நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தில் கண்டி பள்ளிவாசலின் மௌலவி மற்றும் அப்பிரதேச முஸ்லிம் மக்களை சந்தித்து உரையாடினார். சம்பவம் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள பொது மக்களுக்கோ …
Read More »கண்டி வன்முறை யார் காரணம்? – எதிர்க்கட்சித் தலைவர்
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினரே கண்டி திகன சம்பவம் வன்முறையாகவும் கலவரமாகவும் மாற பிரதான காரணம் எனவும் அவர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை கொண்டு இந்த தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கண்டி, தெல்தெனிய சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை …
Read More »இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளை அவசரமாக சந்தித்தார் மஹிந்த
முன்னாள் ஜனாதிபத மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் உள்ள இஸ்லாமிய நாடுகளின்; இராஜதந்திரிகளை சந்தித்து சமகால நிலவரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை குறித்து விளக்கமளிப்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை அவசரமாகச் சந்தித்துள்ளார். எனினும்,இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் இதுவும் வெளியாகவில்லை. அம்பாறை மற்றும் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்களின் பின்னணியில், …
Read More »வடக்கு ரயில் பாதை புனரமைப்பு துரிதப்படுத்த முகாமைத்துவ பிரிவு
ரயில் குறுக்கு பாதையில் பாதுகாப்பு கட்டமைப்பை பொருத்துவதற்கும் மற்றும் வடக்கு ரயில் பாதையை புனரமைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தும் திட்ட முகாமைத்துவ பிரிவுவொன்று அமைக்கப்படவுள்ளது. இலங்கையின் ரயில் வீதி பாதை வலைப்பின்னலின் நீளம் 1450 கிலோமீற்றர்களாகும். அத்தோடு இதில் 1337 குறுக்கு ரயில் பாதை உண்டு. இவற்றில் 520 ரயில் குறுக்குபாதைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மேலும் 400 ரயில் குறுக்கு பாதைகளில் பாதுகாப்பு கட்டமைப்பை …
Read More »நல்லிணக்கம் பாதிக்கப்படின் நாடு அழிவை எதிர்நோக்கும் ; மகாநாயக்க தேரர் எச்சரிக்கை
நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படுமாயின், நாடு பாரிய அழிவை எதிர்நோக்குவதை தடுக்க முடியாது என மல்வத்து பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க நேற்று (புதன்கிழமை) தலதா மாளிகைக்குச் சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள இனங்களுக்கிடையலான இந்த வன்முறைக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள …
Read More »தொடர்ந்து கண்டி நிர்வாகப் பிரிவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது : இராணுவப் பேச்சாளர்
கண்டி மாவட்டத்தில் நிலவிய பதற்றமான சூழல் நேற்றுமுதல் ஓரளவு சாதாரண நிலைக்குத் திருப்புள்ள போதிலும் தொடர்;ந்து ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார் அவர் மேலும் தெரிவித்தாவது, கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த முப்படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்காக மேஜர் ஜெனரல் ருக்மன் …
Read More »கண்டியில் கலவரம் தணிந்தது- ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது!
கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று (காலை) 10 மணிக்கு தளர்த்தப்பட்டுஇ மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்குவரும் வகையில் நேற்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது இன்று மாலை 4 மணிவரை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்இ தற்போது நிலைமை சுமூகமடைந்துள்ளதால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ கடந்த 12 மணிநேரங்களில் எவ்வித பாரதூரமான சம்பவங்களும் இடம்பெறவில்லை …
Read More »