Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 145)

இலங்கை செய்திகள்

சந்திரகிரகணத்தை முழுமையாக பார்க்க அரிய சந்தர்ப்பம்

21ஆம் நூற்றாண்டின் நீண்ட முழுமையான சந்திரகிரகணத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) இலங்கையில் பார்வையிடமுடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பேராசிரியர் கூறியுள்ளார். பௌர்ணமி தினத்தன்று சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைக்கவிருப்பதுடன், சந்திரகிரகணத்தின் போது சந்திரன் இரத்த சிவப்பு நிறுத்தில் காணப்படும். ஐரோப்பா, ஆபிரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆசியா, இந்து சமுத்திரம் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இதனைத் தெளிவாகப் பார்க்க முடியும். 2011ஆம் ஆண்டு ஜூன் …

Read More »

வலப்பனை பிரதேச சபை முன்னாள் தலைவர், சாரதிக்கு 12 வருட சிறைத்தண்டனை

நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலை வரும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் வலப்பனை தொகுதி அமைப்பாளருமான ஜகத் குமார சமரஹேவா மற்றும் அவருடைய வாகன சாரதியாக செயற்பட்ட ஜடிலால் பெர்னாண்டோ ஆகியோருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 12 வருட சிறைத்தண்டனையை 23 ஆம் திகதி விதித்து தீர்ப்பளித்துள்ளது. விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான ஜீப் வண்டியை கடந்த 2004 இல் முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதுடன் அனுமதிப்பத்திரமின்றி …

Read More »

கர்நாடக இசை கச்சேரியில் இலங்கை உலக சாதனை

கர்நாடக இசை கச்சேரியில்

40 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி மேற்கொண்டு புதிய உலக சாதனை படைத்து நம்நாட்டுக்கு பெருமை சேர்த்த திரு ஆரூரன் அருனந்தி அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

Read More »

முகமாலை பகுதியில் வெடிப்புச் சம்பவம்! ஒருவரின் நிலை..

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை கண்ணிவெடியொன்று வெடித்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் DASH நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியாளரான கருணாதிலக என்பவர் காயமடைந்து பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கண்ணிவெடி ஒன்றினை செயலிழக்க செய்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக தகவல் எதனையும் இதுவரை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Read More »

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற மகன் திடீரென மரணம் – அதிர்ச்சியில் தாய்

பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதுமலை தெற்கு மானிப்பாய் சேர்ந்த 38 வயதான ஜோசெப் அருள்தாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று தேனீர் குடித்துக் கொண்டிருந்த குறித்த இளைஞன், திடீரென மயக்கமடைந்து வீழ்ந்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பியவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள …

Read More »

சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி – தந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி!

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் இறுதிச் சடங்கில் இன்று கலந்துகொண்டார். கடந்த 18- ஆம் திகதி இயற்கை எய்திய தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒருமணி நேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்ற சடங்கில் கலந்து கொள்வதற்காக, அரசியல் கைதியான சிவகுமார் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழைத்து …

Read More »

27 ஆம் திகதி முதல் 6 மணி நேர மின்சாரத் தடை

மின்சாரக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கொழும்பின் சில பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்படும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால், கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கு ஜூலை 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் …

Read More »

புதிய கட்சிக்கு தலைவராகும் மஹிந்த ராஜபக்‌ஷே? ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலை என்ன?

மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசியல் கட்சிகள் பலவற்றை இணைத்து ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன கட்சியொன்றினை உருவாக்கவுள்ளதாக, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் கருத்து தெரிவிக்காமல் இருக்க பொதுவான தீர்மானத்திற்கு வந்துள்ளோம். மஹிந்த ராஜபக்ஷவே இறுதி …

Read More »

A/L பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்காதவர்கள் தரவிறக்கம் செய்யலாம்

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்கவில்லை என்றால் விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை பயன்படுத்தி www.doenets.lk என்ற இணையதளத்தில் News headline என்ற தலைப்பின் கீழ் அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்ய முடியும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலமாக அனுபப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இம்முறை க.பொ.த உயர்தர …

Read More »

யாழ்பாணம் திட்டமிட்டு சிதைக்கபடுகிறதா? தொடரும் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்

வாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் சென்ற வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட்டின் கதவு, ஐன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கி பெற்றோல்க் குண்டை வீசி வீட்டைக் கொழுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தாமரை வீதி, வண்ணார் பண்ணையில் உள்ள வீடு ஒன்றிற்கு நேற்று இரவு 8.30 மணி அளவில், மூன்று மோட்டார் சைக்கிளில் சுமார் 6 முதல் எட்டு பேர் வரையான …

Read More »