Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 138)

இலங்கை செய்திகள்

எம்மை விரட்டியதால் மொட்டு உருவானது – முன்னாள் ஜனாதிபதி

எம்மை கட்சியில் இருந்து விரட்டி கட்சிக்கு நாம் தேவையில்லை என்று கூறினர். அதனாலே தாமரை மொட்டு உருவாகியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று முற்பகல் மொனராகலை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்தார். இதன் போது கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார். இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 67 …

Read More »

வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம்

மது­போ­தை­யில்- இரும்­பு ­கம்­பி­க­ளு­டன் வீடொன்­றுக்­குள் புகுந்த மூன்­று­ பே­ரைக் கொண்ட இளை­ஞர் குழு ,வீட்­டின்­ வா­யிலை உடைத்து சேதப்­ப­டுத்­தி­ய­து­டன், வீட்­டின்­ மீது கற்­களை எறிந்­தும் தாக்­கு­தல் நடத்தினர். இந்தச் சம்பவம் வவு­னியா சாந்­த­சோ­லைப் பகு­தி­யில் நேற்று நடந்துள்ளது. தாக்குதலில் குடும்­பத்­த­லை­வர் மற்­றும் கர்ப்பவதியாக அ­வ­ரது மனைவி, இரண்டு குழந்­தை­கள் உட்­பட ஐந்து பேர் செய்­வ­த­றி­யாது தவித்­த­து­டன், வீட்­டின் கதவை மூடி­விட்டு உள்­ளேயே இருந்­துள்­ள­னர். பின்­னர் பொலி­ஸா­ருக்குத் தகவல் தெரிவித்தனர். பொலி­ஸார் …

Read More »

நல்லூரில் கோலகலமாக மஹா கும்பாபிஷேக திருவிழா

ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஷண்முகர் ஸ்வர்ண விமான தங்கவிமான மஹா கும்பாபிஷேக திருவிழா இன்றைய தினம் நல்லூரில் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி தண்டாயுதபாணிஸ்வாமி கோயில், திருப்பதி , ஸ்ரீ ரங்கநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில் தங்க விமானங்கள் உள்ளன. இன்றைய தினத்துடன் இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயம் நல்லூர் என்பது குறிப்பிடத்தக்கது. நல்லூர் ஆலய மகோற்சவம் சிறப்பாக …

Read More »

அரசியல் முகத்தை வெளிப்படுத்தும் கோத்தபாய

Gotabaya Rajapaksa

உத்தரவுகளை மட்டுமே பிறப்பிக்கத் தெரிந்த கோத்தபாய, அழைப்புகளையும் விடுக்கத் தொடங்கினார்… இலங்கையின் அனைத்து தேசப்பற்றுள்ள சக்திகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள “மக்கள் சக்தி கொழும்புக்கு” என்ற அரச எதிர்ப்பு பேரணிக்காக செப்டம்பர் மாதம் 05ம் திகதி ஒன்று கூடுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் புத்திஜீவிகளிடமும் அவர் இந்த வேண்டுகொளை விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ ஆட்சிக் …

Read More »

என்ன நடக்கும் எனும் அச்சத்தில் மைத்திரி

மைத்திரி மஹிந்த

சக்திவாய்ந்த சில பெரு நிறுவனக் குழுக்கள் (corporate groups) அரசாங்கங்களை கவிழ்க்கும் சூழ்ச்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நேற்று ஆரம்பமான பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் நான்காவது உச்சிமாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சில சக்திவாய்ந்த பெரு நிறுவனக் குழுக்கள் அரசாங்கங்களை கவிழ்ப்பதில் சிலவேளைகளில் வெற்றிபெற்றிருக்கின்றன. எனவே, இந்தப் பெரு நிறுவனக் குழுக்கள் விடயத்தில், நாடுகளின் தலைவர்கள் விழிப்பாக இருக்க …

Read More »

இலங்கைக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்!

காலியில் இருந்து 3,700 கி.மீ தொலைவில் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு தெற்கே இந்து சமூத்திரத்தில் 5.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. எனினும் இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More »

கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள்

முல்லைத்தீவு – திருமுறிகண்டியை பகுதியில் இளம் குடும்பப் பெண் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கொலையாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் முல்லைத்தீவு – முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கறுப்பையா நித்தியகலா என்ற 32 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டிருந்தார். கிளிநொச்சி – அறிவியல் நகர பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக …

Read More »

பத்து ஆண்டுகளின் பின்னர் முகமாலையில் தோன்றிய மாதா!

கிளிநொச்சியில் பத்து வருடங்களின் பின்னர் புதைந்து போயிருந்த மாதா சிலை ஒன்று காட்டில் இருந்து கிடைத்துள்ளது. முகமாலையிலுள்ள மாதா தேவாலயத்தில் இருந்த உருவச் சிலையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போர் அனர்த்தம் காரணமாக முகமாலையில் உள்ள தேவாலயம் அழித்து போய்விட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதி மக்கள் இன்னமும் தங்கள் இடங்களுக்கு சென்று குடியேறாத நிலையில் அவர்கள் இடைக்கிடையே, சென்று தமது காணிகளை பார்த்து வருகின்றனர். இந்த வாரம் தங்கள் …

Read More »

முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்திற்கு இவர் தான் காரணம்!

நல்­லாட்சி அரசு ஆட்­சிப் பீடம் ஏறிய பின்­னர் முல்­லைத்­தீவில் எந்­தச் சிங்­க­ளக் குடி­யேற்­றத்­தை­யும் மேற்­கொள்­ள­வில்லை. அங்கு நடை­பெற்ற சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் எல்­லாம் முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் காலத்­தில் மேற்­கொள்­ளப்­பட்­ட­வையே. முல்­லைத்­தீ­வில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் முன்­னெ­டுக்­க ப்­பட்­ட­மைக்­கு­ரிய சாட்­சி­யங்­கள் இருந்­தால் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அர­சு­டன் பேச்சு நடத்­த­வேண்­டும். அதை விடுத்து இன­வா­தம் கக்­கிக் கொண்­டி­ருக்­கக் கூடாது. இவ்­வாறு அமைச்­ச­ரும், அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்­தார். அரச …

Read More »

வெள்ளை கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் பேரணி

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களும், வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களும் எங்கே என வினவி, மன்னாரில் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டே இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச விசாரனையை வலியுறுத்தி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமானது. குறித்த பேரணி மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியூடாக …

Read More »