புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான விசேட கூட்டம் ஒன்று தற்போது கொழும்பில் இடம்பெறுவதாக கொழுப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுதினம் திங்கட்கிழமை அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக குறித்த செய்தி தெரிவிக்கின்றது.
Read More »மகிந்தவின் புதிய அரசில் அமைச்சராக பதவியேற்கவுள்ள கருணா?
கருணா அம்மான் அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் நுளையும் கருணாா முக்கிய அமைச்சு பதவி வழங்கப் படலாம்…
Read More »பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேர் அதிரடியாக கைது!
அம்பாறை ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் பொலிஸாரினால் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகக் கட்டிடத்தில் தங்களது பெற்றோருடன் தங்கியிருந்த நிலையில் அக்கரைப்பற்றுப் பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை, தொழில்நுட்ப துறையை சேர்ந்த சில சிங்கள மாணவர்கள், கடந்த இரண்டு வார காலமாக ஆக்கிரமித்து போராடி வந்தனர். இதனையடுத்தே பல்கலைக்கழகத்தை மறு அறிவிப்பு செய்யும் வரையில், மூடும் தீர்மானம் நிர்வாகத்தினால் …
Read More »விக்கி புதுக்கட்சி அறிவித்த நாள் தமிழர் வாழ்வில் கறைபடிந்த நாள்
80 வயதிலும் பதவிவெறி பிடித்து, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாரகரன் உருவாக்கிய தமிழ் மக்களின் அரசியல் இருப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருக்குலைக்க சிங்களப் பேரினவாதத்தால் சூசகமாக களமிறக்கப்பட்ட தமிழின துரோகியை அடையாளம் காட்டியநாள் நேற்று (நேற்றுமுன்தினம்). இது தமிழர் வரலாற்றில் கறைபடிந்த நாள் என்று வரலாறு தமிழருக்கு குறித்துச் சொல்லும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று …
Read More »மஹிந்த் மற்றும் சுதந்திர கட்சி அணியை மிரட்டிய ரணில்
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு நிபுணர்களால் சமர்பிக்கப்பட்ட வரைவு ஆவணத்தின் மொழி பெயர்ப்புக்களை படித்துப் பார்ப்பதற்கு நேரம் போதாது என்றும் கால அவகாசம் தேவை எனவும், மகிந்த அணியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியும் வலியுறுத்தின. ஆனால் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, அப்படியானால் இந்த வரைவு ஆவணத்தை மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப் போகின்றேன் என்று மிரட்டியதை அடுத்து மகிந்த அணியும், சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியும் பணிந்தன. வழிநடத்தல் குழுவின் …
Read More »கிளிநொச்சி வைத்தியசாலையில் 12 வயது சிறுமிக்கு பிரசவம்! திகைத்துபோன மருத்துவர்கள்
மல்லாவியில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அம்புலன்ஸில் அழைத்துவரப்பட்ட 12 வயது சிறுமி போகும் வழியிலே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையும் பிறந்தது. பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் தாயும் சேயும் அனுமதிக்கபட்டனர்.இந்த 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த செய்தி மருத்துவர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Read More »இலங்கை அதிபராகும் கோத்தாவின் கனவு…!
டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் அமைப்பதில் 80 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக, அடுத்த அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என நம்பப்படும் கோத்தாபய ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக உருவாக்கப்பட்ட மேல்நீதிமன்றுக்குச் சென்றிருந்தார். அங்கு, கோத்தாபய ராஜபக்சவிடம் ‘மகிந்த தங்களை அடுத்த அதிபர் வேட்பாளராகக் களமிறக்காது, தங்களின் சகோதரரான பசில் ராஜபக்சவை அடுத்த அதிபர் வேட்பாளராக களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது’ என ஊடகங்கள் கேள்வியெழுப்பின. ‘எமது குடும்பத்திற்குள் பிரிவை ஏற்படுத்துவதை …
Read More »அரசாங்கத்துடன் அமைச்சர் சம்பிக்க கருத்து மோதல்
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைகளை நீக்கிக் கொள்வதற்கு இராஜதந்திர ரீதியிலான முன்னெடுப்புக்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என மாநகர மற்றம் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கருத்தை அமைச்சர் முன்வைத்துள்ளார். இதுவல்லாமல், காணாமல் போனோர் ஆணைக்குழு, காணாமல் போனோர் செயலகங்கள், இழப்புக்களுக்கான நஷ்டஈடு வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மூலமாக …
Read More »ஆறு இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்களை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். தமிழகம் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஆறு மீனவர்கள் இழுவை மடி படகில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த வேளை கடற்படையினர் அவர்களை கைது செய்ததுடன் , அவர்கள் பயணித்த படகையும் கைபற்றினார்கள். குறித்த மீனவர்களை இன்றைய தினம் காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு …
Read More »மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி
மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதி – டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பு -ஜனாதிபதி மலையக மக்களுக்கு முதற்தடவையாக நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாதுகாப்புத் தரப்பினரின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் …
Read More »