மாகாண சபை தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் நடத்துவதற்கான பிரேரணை இதுவரை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படாமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இன்று நாடாளுமன்றத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதிநாள் விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து வரவு செலவுத்திட்டம் மீதான …
Read More »சிறிலங்கா இன்னும் அதிகம் செய்ய வேண்டும் – நோர்வே அமைச்சர்
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஏற்றுக் கொள்ளுகின்ற அதேவேளை, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது என்று நோர்வேயின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்ட அவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். “சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக, நோர்வே மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாங்கள் …
Read More »மகிந்த – மைத்திரி தலைமையில் அவசர கலந்துரையாடல்
வரவு செலவுத்திட்டம் குறித்த இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மாலை 4 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கலந்துரையாடலில், எதிர்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது, …
Read More »ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு – இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.04.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: நாணயம் வாங்கும்விலை விற்கும்விலை டொலர் (அவுஸ்திரேலியா) 121.7039 126.9493 டொலர் (கனடா) 128.5144 133.3428 சீனா (யுவான்) 25.4076 26.6326 யூரோ (யூரோவலயம்) 192.8029 199.7343 யென் (ஜப்பான்) 1.5392 1.5969 டொலர் (சிங்கப்பூர்) 126.9464 131.3531 ஸ்ரேலிங்பவுண் (ஐக்கியஇராச்சியம் ) 226.3746 233.8107 பிராங் (சுவிற்சர்லாந்து) 171.9774 178.1643 டொலர் (ஐக்கியஅமெரிக்கா) 172.6505 176.4949 …
Read More »ரணிலின் திருகுதாளங்களை போட்டுடைத்தார்: சுமந்திரன்
வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகளில் போதியளவு உண்மைத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் இல்லை, தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது மிகப்பெரும் குறைபாடாக இருக்கின்றது என்கிறார் எம்.ஏ.சுமந்திரன். இவ்விடயம் தொடர்பில் எமது குழு அறிக்கையைத் தயாரிப்பதற்குத் தேவையான தகவல்களைக் கோரியிருந்த போதிலும் நிதியமைச்சு அதற்கு ஒத்துழைக்கவில்லை. தகவல்களை வழங்குவதற்கு அவர்கள் தாமதித்தமையின் காரணமாகவே நாங்கள் அறிக்கை சமர்ப்பிப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன், எம்முடைய குழு …
Read More »இலங்கை மக்களிற்கு அபாய அறிவிப்பு!
நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் முதியோர் மற்றும் சிறுவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி, மேல், தெற்கு மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் எனவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது. இப்பகுதிகளில் 32 இற்கும் 41 இற்கும் இடைப்பட்ட செல்சியஸ் வெப்பநிலை காணப்படும் எனவும் கூறியுள்ளது. இந்த வெப்பநிலைக்கு …
Read More »தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சை தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு
5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை இரத்துச் செய்யப்படுமாக இருந்தால் அதற்கு முன்னர் அது தொடர்பான மாற்று வேலைத்திட்டங்களை தயாரித்த பின்னரே அது நடக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இவ்வாறு மாற்று வேலைத் திட்டத்தை தயாரிக்காது அந்த பரீட்சை இரத்துச் செய்யப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும் இந்த வருடத்திலிருந்தோ அல்லது அடுத்த வருடத்திலிருந்தோ அதனை செய்யப் போவதில்லை. எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் …
Read More »இலங்கையில் முச்சக்கரவண்டி இறக்குமதிக்கு தடை?
இலங்கைக்கு முச்சக்கரவண்டிகளை இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான தீர்மானம் ஒன்று எட்டப்பட வேண்டும் எனவும் நவீன் திசாநாயக கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றுவரும் வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தற்போது இலங்கையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக முச்சக்கரவண்டிகள் உள்ளதாகவும், அதனால் மில்லியன் …
Read More »போர்க்குற்றங்கள் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரத்தியேக விசாரணை
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, புலம்பெயர் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரத்தியேக (தனியார்) விசாரணையை நடத்தவுள்ளது. இந்த விசாரணைக்காக ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் அடங்கிய விபரங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் நேற்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துயருற்ற தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் சரியான முன்னேற்றம் காண ஐ.நா …
Read More »தனிநபர் கொலைகள் தொடர்பில் கவலையில் டக்ளஸ்
நாட்டில் இடம்பெற்றிருந்த தனிநபர் கொலைகள் தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை தற்போது காணப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றுவரும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் …
Read More »