Monday , October 20 2025
Home / செய்திகள் (page 346)

செய்திகள்

News

கமல் அறிவிப்புக்காக காத்திருக்கின்றேன்: கஸ்தூரி

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததில் இருந்தே பலரும் அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேரவிருக்கின்றாரா? என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். அதற்கேற்றாற்போல் அவருக்கு ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவரும் எனது சகோதரர்கள் என்று கூறிவிட்டதால் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல் நெருங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் கூறியபோது, ‘இருவருமே ஊழலுக்கு எதிரானவர்கள். விரைவில் கமல்ஹாசனின் மிகப்பெரிய …

Read More »

கலாமிற்கு மாலை போடும் அருகதை இவர்களுக்கு கிடையாது – விஷால் விளாசல்

தமிழக அரசியல்வாதிகள் பற்றி ஒரு காட்டமான கருத்தை நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு விஷால் பேட்டியளித்தார். அப்போது அனிதாவின் தற்கொலை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால் தற்கொலை செய்து கொள்ளுபோது அனிதா எவ்வளவு வலியுடன் இருந்திருப்பாள் என நினைத்தால் வேதனையாக இருக்கிறது. அனிதாவின் இடத்திலிருந்து யோசித்தால்தான் அந்த வலி தெரியும். அனிதா மாதிரியான குழந்தைகளை கனவு காணச்சொன்ன அப்துல்கலாமை இந்த அரசியல்வாதிகள் …

Read More »

ஊதியம் கிடையாது என்பது ஆசிரியர்களுக்கு மட்டும் தானா அரசியல்வாதிகளுக்கு பொருந்தாதா?

சென்னை: சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் எம் எல் ஏக்கள் தொடர்பாக கமல்ஹாசன் விமரசனம் செய்து டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அவர் தனது டுவிட்டரில் கமல்ஹாசன் கூறி இருப்பதாவது:- மரியாதைக்குரிய நீதிமன்றம் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் குறித்து எச்சரிக்கை செய்தது. வேலை செய்வதில் இருந்து விலகி நிற்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு இதே போன்ற எச்சரிக்கைகளை வழங்கும்படி நீதிமன்றத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். வேலைக்கு செல்லவில்லை என்றால் சம்பளம் இல்லை என்பது அரசு ஊழிர்களுக்கு …

Read More »

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்; ரஜினியையும் இணைத்து கொள்வேன்

சென்னை: நடிகர் கமல்ஹாசன், ரஜினியிடம் அரசியல் குறித்து பேசுவேன் என்று கூறியுள்ளார். கமல்ஹாசன் அண்மைகாலமாக தமிழக அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். இதனால் கமல் எப்போது வேண்டும் என்றாலும் அரசியலில் குதிக்கலாம் என்று செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல், நான் தொழிலுக்காக நடித்து வருகின்றேன்.சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர். அறவழியில் போராடுவதே ஆரம்பம், அஹிம்சையின் உச்சக்கட்டம் போராட்டம் …

Read More »

எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயலாம்? பரபர ஆலோசனையில் தினகரன்

சென்னை: தம் மீது எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயும் என்பதால் தினகரன் தீவிர சட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி தரப்பு – தினகரன் அணி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து தினகரன் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. அதேநேரத்தில் ஏற்கனவே நாஞ்சில் சம்பத்தை முடக்கியது போல தம் மீதும் வழக்குகள் பாயலாம்; …

Read More »

‘தினகரன் ஒரு திருடன்’: ஜெயகுமார் ஆவேசம்

அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ”தினகரன் ஒரு திருடன்; அவரது வித்தையை மக்கள் ஏற்க மாட்டார்கள்,” என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார். சென்னை விமான நிலையத்தில் அவரது பேட்டி: ‘ஊரின் நிலை தெரிந்து உடும்பை தோளில் போட்டானாம் ஒருத்தன்’ என்ற பழமொழி, தமிழக மக்களுக்கு தெரியும். இதற்கு, மதில் ஏறி திருட வந்தவன், மக்களை பார்த்ததும், தான் திருடன் இல்லை எனக்காட்ட, தோளில் கிடந்த உடும்பை காட்டி, வித்தை காட்டினானாம். அது போன்றவர் தினகரன். …

Read More »

ஜெ., சிகிச்சை போட்டோ வெளியிட தினகரன் திட்டம்

‘ஜெயலலிதா மரணத்திற்கு, சசிகலா குடும்பமே காரணம்’ என, அமைச்சர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வரும் நிலையில், சிசிச்சை தொடர்பான போட்டோக்களை வெளியிட தினகரன் திட்டமிட்டுள்ளார். அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைந்த பின், தினகரன் மீது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சரமாரியாக குற்றம் சாட்டி வருகின்றனர். செப்., 15ல், வடசென்னையில் நடந்த பொதுகூட்டத்தில், ‘தினகரன், மாமியார் வீட்டிற்கு செல்வார்’ என, முதல்வர் பழனிசாமி ஆவேசமாக பேசினார். அவரைத் தொடர்ந்து, ‘தினகரன் கதை, …

Read More »

இம்மாத இறுதிக்குள் எடப்பாடி ஆட்சி காலி

திண்டிவனம்: ”18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்துள்ளதன் மூலம், சபாநாயகர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு வரும்” என்று தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் அ.தி.மு.க., (அம்மா) சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சென்னையிலிருந்து காரில் சென்ற தினகரனுக்கு, விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் டோல்கேட்டில் நேற்று காலை மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். அப்போது தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் அணியில் 21 எம்.எல்.ஏ.,க்கள் …

Read More »

கல்லூரி கட்டின ஸ்டாலின் தண்ணீருக்காக அணைகள் கட்டினாரா?

சென்னை : மத்திய அரசை குறை கூறும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக தாக்கி, விமர்சித்துள்ளார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அடுக்கடுக்காக அவர் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளார். தமிழிசை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக ஆட்சியில் ஸ்டாலின் தனியார் ஆங்கில பள்ளி கட்டினீர். பொறியியல், மருத்துவக் கல்லூரி கட்டினீர். தண்ணீருக்காக அணைகள் கட்டினீரா? மோடி அரசுக்கு எதிராக கீழடி …

Read More »

கைது செய்ய செந்தில் பாலாஜியை தேடும் தமிழக போலீஸ்

குடகு : சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கி உள்ள கர்நாடகா மாநிலம், குடகு சொகு ரிசார்ட்டில் முகாமிட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதற்காக அவர்கள் குடகு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4.25 கோடி அளவிற்கு லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது புகார் …

Read More »