உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆசனப் பங்கீட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் உருவாகியுள்ள முரண்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற இருந்த கூட்டம் திடீரெனக் கைவிடப்பட்டது. இன்று காலையில் அந்தச் சந்திப்பு சிலவேளைகளில் இடம்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஆசனப் பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இந்த முரண்பாடு காரணமாக, ரெலோ அமைப்பு தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தது. இதன் …
Read More »கூலித் தொழிலாளியை உயிரோடு எரித்த கொடூரன்
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த முகமது அப்ரசுல் என்பவர் ராஜஸ்தானின், ராஜ்சமந்த் பகுதியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரை அப்பகுதியை சேர்ந்தவர் கொடூரமான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். படுகாயமடைந்த அவர் உயிருக்காக போராடி கொண்டிருக்க அவர் மீது ஆயிலை ஊற்றி உயிருடன் எரித்துள்ளார். இந்த சம்பவத்தின்போது, சம்புலால் நண்பர் கொலை சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளார். கொலை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிவருகிறது. …
Read More »அத்துமீறி தாக்குதல் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியா 1300 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளது. இந்தியா நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 52 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதாகவும் 175 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. இஸ்லமபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் கூறுகையில், “ காஷ்மீர் மக்களின் மீது இந்திய அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது. இந்த விவகாரத்தை உலக நாடுகள் கவனத்தில் …
Read More »வவுனியாவில் விழிப்புணர்வு வாகனப் பேரணி
வவுனியாவில் “பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுப்போம்” எனும் தொனிபொருளில் விழிப்புணர்வு வாகன பேரணியும் பொது மக்களிடம் கையச்சுப் பெறும் நிகழ்வும் நேற்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய அபிவிருத்தி நிதியம், ஜெர்மன் நிதி வழங்கும் நிறுவனம் ஆகியன இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்தது. பேரணியின் நிகழ்வில் பொதுமக்கள், இளைஞர்கள் கையில் ஒறேஞ் நிறத்திலான மையை பூசி கையச்சு பதியும் நிகழ்வும் வாகனத்தைக் கழுவி சுத்தம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.
Read More »ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்க தினேஷ் குணவர்தன கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார். நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைகளில் மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவுள்ளதாகவும் அதன்போது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சுட்டிக் காட்டியே தினேஷ் குணவர்தன இந்தக் கோரிக்கையை விடுத்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர், 154 பாதுகாப்பு அதிகாரிகள் ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருப்பதாகவும் உயிராபத்து குறித்த …
Read More »தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என இனி எவரும் தங்களை தாங்களே கூறிக்கொள்ள கூடாது
“காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம் வருகின்ற உள்ளூராட்சி தேர்தலை பகிஸ்கரிக்கப் போகின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More »இந்தியா சென்ற காரணம் எனக்கு மட்டுமே தெரியும்
நான் ஆயிரம் தடவை இந்தியாவுக்குச் சென்று வந்திருப்பேன். ஒவ்வொரு தடவையும் எதற்காக இந்தியா சென்றேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அந்தக் கட்சியின் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டது. அதன்பின்னர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துக் கூறினார். “அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸூடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவீர்கள் …
Read More »தேர்தல் அதிகாரிக்கு உதவியாக ஓபிஎஸ் உறவினர்
ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் வேலுச்சாமிக்கு உறுதுணையாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே. நகர் தேர்தல் தொடர்பாக வேலூச்சாமிக்கு உதவியாக ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் பூபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் வேலுச்சாமியின் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். விஷால் தொடர்பாக வெளியான பல புகைப்படங்களில் அவரை பார்க்க முடிகிறது. வேட்பு மனு பரீசிலனைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். சென்னை மாநகராட்சியில் உதவி பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வரும் …
Read More »கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும் : சுமந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளை சமரசமாக தீர்க்கமுடியும்.
Read More »கசிப்பு வியாபாரி உள்ளிட்ட நால்வர் வசமாகச் சிக்கினர்!
தர்மபுரம் பகுதியில், பொலிஸார் மேற்கொள்ளும் சுற்றிவளைப்புக்களில் பொலிஸாருக்கு டிமிக்கி விட்டுத் தப்பித்துச் செல்லும் கசிப்பு வியாபாரி உள்ளிட்ட நால்வர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர் என தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமேத விமலகுணரத்தின தெரிவித்தார். சட்ட விரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸார் அந்தப் பகுதியில் இனங்காணப்பட்ட இடங்களை சுற்றி வளைத்துத் தேடுதல்களை நடத்திவருகின்றனர். நேற்றுமுன்தினமும் இவ்வாறு தேடுதல் இடம்பெற்றது. தேடுதலில் கஞ்சா வைத்திருந்தனர் என்ற குற்றச் சாட்டில் …
Read More »