கமல்ஹாசன் அவ்வபோது நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் தன் கருத்தை கூறி வருகின்றார். இந்நிலையில் தான் அரசியலுக்கு வரவுள்ளதாக அவர் அறிவித்துவிட்டார். இவருடைய நண்பர் மற்றும் சக நடிகர் ரஜினிகாந்தும் இதை அறிவிக்க, தமிழகமே தற்போது யார் முதலில் கட்சி தொடங்குவார்கள் என்று தான் பார்த்து வருகின்றது. தற்போது கமல் ஒரு பேட்டியில் ‘கட்சி தொடங்க பயமா? என்று சிலர் கேட்கின்றனர், அரசியல் கட்சி தொடங்க தாம் தாமதம் செய்வது, …
Read More »சசிகலாவை வம்புக்கு இழுத்த சூர்யா
சூர்யா, கீர்த்திசுரேஷ், நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் சசிகலா தரப்பினர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவிடம் ஒரு பெண், நாட்டில் ஊழல் இல்லாமல் இருக்க பாடுபடுவேன் என்று கூறுவதாகவும், அந்த பெண்ணின் பெயர் என்ன என்று சூர்யா கேட்க அதற்கு அவர் சசிகலா என்று …
Read More »வளர்மதிக்கு பெரியார் விருது
தமிழக அரசின் 2017ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருதுகளை வழங்கி வரும் நிலையில் 2017-ம் ஆண்டிற்கான விருதுகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். இதன்படி பெரியார் விருது முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கே.ஜீவபாரதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வருகின்ற 16-ம் தேதி சென்னை …
Read More »முதல்வரான பிறகு கையெழுத்திட்ட கோப்புகள்
முதல்வராக பதவியேற்ற பிறகு, தான் கையெழுத்திட்ட கோப்புகள் எத்தனையென்று முதல்வர் பழனிசாமி புள்ளி விவரத்துடன் பதில் அளித்தார் சட்டசபையில் கவர்னர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியவற்றில் முக்கிய விவரங்கள் வருமாறு ஆளுநர் உரையை பாராட்டியவர்கள் மற்றும் குற்றம் சாட்டியவர்களுக்கு நன்றி என்று அவர் கூறியுள்ளார். மக்களுக்காகதான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எனது அலுவலகத்தில் …
Read More »அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமான வார்த்தையால் திட்டிய டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது தனது தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெளியிட்ட முக்கிய கோஷம், “அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களையே வேலைகளில் அமர்த்துவோம்” என்பதாகும். இதற்கான நடவடிக்கையிலும் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு உள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் விவகாரத்திலும் முன்னுரிமை கொடுத்துதான் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் டொனால்டு …
Read More »பெண்களும் மதுபானம் வாங்கலாம், விற்கலாம்
இலங்கையில் பெண்கள் மதுபானம் வாங்குவது மற்றும் விற்பதற்கு இருந்த தடை 38 வருடத்திற்கு பின் நீக்கப்பட்டு உள்ளது இலங்கை கடந்த 1979ம் வருட தொடக்கத்தில் திறந்தவெளி சந்தை பொருளாதார நிலையை தனது நாட்டில் கொண்டு வந்தது. அதில் இருந்து பெண்கள் மதுபானம் வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நடைமுறையில் இருந்த நிலையிலும் பல தொழில் நிறுவனங்கள் பெண்களை மதுபானம் பரிமாறும் மற்றும் விற்கும் பணியில் ஈடுபடுத்தியது. …
Read More »தினகரனின் ஸ்லீப்பர் செல் தீரன்?
தினகரனின் ஆதரவாளர்களை பலரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அவ்வப்போது நீக்கி வருகின்றனர். கடந்த 25ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக கூட்டத்தில் தினகரனின் ஆதரவாளர்களான தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல், புகழேந்தி, நாஞ்சில் சம்பத், சி.ஆர். சரஸ்வதி,கலைராஜன், பார்த்திபன் உள்ளிட்ட சிலர் நீக்கப்பட்டனர். மேலும் அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். …
Read More »கோவிலில் மயங்கிய பூசகர்- உயிரிழந்தார்!!
பூசைக்காக கோவில் மண்டபத்தைக் கழுவிய பூசகர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவம் கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டியில் நேற்று இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த ப.திருலோகநாதன் (வயது – 61) என்பவரே உயிரிழந்தார். நெஞ்சுவலி என்றுகூறியபடி மயங்கி வீழ்ந்துள்ளார். வாகனம் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவர் அதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டமை தெரியவந்தது. சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்ட்டது.
Read More »தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் கைது!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
Read More »போர்க்குற்றங்கள் இராணுவ அதிகாரியிடம் பிரிட்டன் விசாரணையாம்!
இராணுவ அதிகாரியிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரிட்டன் விசாரணை நடத்தியிருப்பதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்ட இராணுவ அதிகாரியிடமே, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எப்போது இந்த விசாரணை நடத்தப்பட்டது, விசாரணைக்குள் ளாக்கப்பட்ட இராணுவ அதிகாரி யார் என்ற விவரங்கள் எதையும் சிங்கள ஊடகம் வெளியிடவில்லை. புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு அமையவே பிரிட்டன் இந்த விசாரணையை நடத்தியிருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Read More »