Thursday , October 16 2025
Home / செய்திகள் (page 243)

செய்திகள்

News

வடக்கு,கிழக்கில் பெரும்பான்மை சபைகள் தமிழ் கூட்டமைப்பு வசம்

வடக்கு, கிழக்கில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பெரும்­பான்­மை­யான சபை­களை வெற்­றி­கொண்­டுள்ள போதிலும் யாழ்.மாவட்­டத்தில் அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி இரு சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் பெரு­ம­ள­வான சபை­களில் கணி­ச­மான உறுப்­பி­னர்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது. வடக்கில் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­களில் பெரும்­பான்­மை­யான சபை­களை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யுள்­ளது. யாழ். மாந­கர சபையில் 16 உறுப்­பி­னர்­களை பெற்று அதி­கூ­டிய ஆச­னங்­களை கைப்­பற்­றிய கட்­சி­யாக கூட்­ட­மைப்பு …

Read More »

பாராளுமன்றைக் கலைக்குமாறு மஹிந்த அதிரடி அறிவிப்பு !

மகிந்த

பாராளுமன்றைக் கலைத்து விட்டு பொதுத் தேர்தலொன்றுக்கு சென்று உறுதியான அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பத்தரமுல்லை நெலும்மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் உறுதியான அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றைக் கலைத்துவிட்டு பொதுத்தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும். …

Read More »

கூட்டமைப்பு- காங்கிரஸ் இணைந்தாலே ஆட்சி!!

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவு

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யும் இணை­யா­மல் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்­கான வாய்ப்­புக்­கள் வெகு குறை­வா­கவே உள்­ளன. வெளி­யா­கி­யுள்ள தேர்­தல் முடி­வு­கள் இதைத் தெட்­டத் தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பூந­கரி பிர­தேச சபை­யி­லும், திரு­கோ­ண­ மலை மாவட்­டத்­தின் வெரு­கல் பிர­தேச சபை­யி­லும் மாத்­தி­ரமே தனித்து ஆட்சி அமைக்க முடி­யும். ஊர்­கா­வற்று­றைப் பிர­தேச சபை­யில் ஈ.பி.டி.பி. தனித்து ஆட்சி அமைக்க …

Read More »

மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை-(படம்)

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி புதன் கிழமை மாலை சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. -இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன் (வயது-20) என தெரிய வருகின்றது. -குறித்த இளைஞன் சுவிட்சர்லாந்தின் (ECUBLENS VD) பகுதியில் கடந்த 3 வருடங்களாக வாழ்ந்து …

Read More »

தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடனும் தாமரை மொட்டு சின்னத்துடனும் இணைந்திருக்கின்றனர். ஆகவே அரசாங்கத்தின் பிரதான தலைவர்கள் இருவரும் …

Read More »

மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகின்றோம் ; ஐ.தே.க.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நாம் தலைவணங்குகின்றோம். மக்கள் எமக்கு வழங்கிய எச்சரிக்கையாகவே தேர்தல் முடிவினை கருதுகின்றோம். இது தொடர்பில் ஆழ்ந்து சிந்தித்து எமது செயற்பாடுகளை சரியான முறையிலும் வேகமாகவும் முன்னெடுக்க நாம் பாடுபடுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டில் சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கு மக்கள் எமக்கு பொறுப்பு வழங்கினர். அதே …

Read More »

மக்கள் மனங்களை வென்றவர் என்றும் மறையப்போவது கிடையாது

மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் . நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பல்வேறு …

Read More »

சவுதியில் பெண்கள் பர்தா அணிய வேண்டியதில்லை

சவுதியில் பெண்களுக்கு அதரவாக இஸ்லாமிய மத ரீதியான கட்டுபாடுகள் தொடர்ந்து விலக்கப்பட்டு வருகிறது. சவுதியில் இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாக பல விஷயங்கள் நடந்து வருகிறது. திரையரங்குகள் திறக்க திட்டமிட்டுள்ளனர். பெண்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது பெண்கள் பர்தா அணிவது அவசியமில்லை என்று முதன்மை இஸ்லாமிய மதபோதகர் ஷேக் அப்துல்லா …

Read More »

விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானம்: 71 பயணிகள் கதி என்ன?

ரஷ்யாவை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று திடீரென நடுவானில் விபத்துக்குள்ளானதால் அதில் பயணம் செய்த 71 பயணிகளும் மரணம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ரஷ்யாவை சேர்ந்த ”சரடோவ் ஏர்லைன்ஸ்” நிறுவனத்திற்கு சொந்தமான ஆன்டோனோவ் ஏஎன்-148 என்றா பெயரை கொண்ட இந்த விமானம் மாஸ்கோவில் இருந்து அரசாக் என்ற நகரம் நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விமானம் பைலட்டுக்களின் கட்டுப்பாட்டை இழந்து ரஷ்யாவில் உள்ள ஆர்குனாவோ என்ற கிராமம் …

Read More »

விமானத்தை கைகளால் தள்ளிய பயணிகள்

இந்தோனசியாவில் பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விமானத்தைக் தள்ளும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சியில் பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விமானத்தைக் தள்ளுவது போன்ற விளம்பரம் ஒன்று ஒளிப்பரப்பாகும். அதே போல இந்தோனேசியாவின் தம்போலாகா விமான நிலையத்தில், கருடா இந்தோனேசியா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஒடுதளத்தில் இறங்கியது. அந்த விமானத்தை பயணிகள் அனைவரும் தள்ளுவது போன்ற நகைச்சுவையான வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியானது. இது குறித்து …

Read More »