சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் தற்போது 39.42 அடி தண்ணீர் மட்டுமே இருப்பதால் வரும் 12ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக நீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார். தமிழகத்தில் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக அரசு செய்யும் …
Read More »அய்யாக்கண்ணு கைது – முதல்வர் பழனிசாமி விளக்கம்
கேள்வி நேரம் முடிந்த பின் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரை பார்க்க வந்த விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வரும் வழியிலே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக பேசினார். இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாதவரம் – அம்பத்தூர் பகுதிகளில் துண்டுச்சீட்டு பிரச்சாரத்தை செய்ய அனுமதியை பெற்றுவிட்டு, அனுமதி பெறாமல் வடபழனி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் எனவும், அதன் காரணமாகவே …
Read More »முள்ளியவளையில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை! நடந்தது என்ன?
மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் முள்ளியவளை பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் Information Technologg and management பிரிவில் கல்விகற்று வரும் 24 அகவையுடைய இராசநாயகம் நிறோசிகா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கடந்த …
Read More »முன்னாள் ஜனாதிபதியிடம் இரகசிய விசாரனை! மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இரகசிய விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பாகவே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, விசாரணைகளுக்கான நாளை மஹிந்த தெரிவிக்க வேண்டும் எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர் வழங்கிய முக்கிய தகவல்களின் அடிப்படையிலேயே …
Read More »வடக்கு முதலமைச்சரின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்
போருக்கு பின்னரான காலத்தில் இளைஞர், இளம் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு விரைவில் நடைபெறும் என்று மாகாண முதலைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்த இளைஞர் மாநாட்டுக்கான ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றிபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவை அரசியல் …
Read More »கர்நாடக முதல்வருடன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் குமாரசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை பெங்களூருவில் இன்று சந்தித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கர்நாடக முதல்வர் …
Read More »எதிர்கால சந்ததிக்கு அச்சுறுத்தல்! மைத்திரிக்கு எச்சரிக்கை
நாட்டில் அதிகரிக்கும் சூழல் மாசடைவுகள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், இதனை கருத்திற்கொண்டு அனைவரும் சூழலை பாதுகாக்க கைகோர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கேகாலை நகரில் நேற்று இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”சூழல் கட்டமைப்பினைப் பாதுகாப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், அது எவ்வகையிலும் தவிர்க்கப்பட முடியாத …
Read More »வடக்கு முதலமைச்சரின் யுக்தி!
கடந்த வாரம் நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மொஹமட் அலியின் வெற்றிக்கான யுக்தியைப் பற்றி விளக்கியிருந்தார். மொஹமட் அலியிடமிருந்து தமிழ் மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது அந்த விளக்கத்துக்கான காரணம். அதனை அவர் வெளிப்படையாகவும் கூறியிருந்தார். தன்முகத்தில் அடிபடாமல் வைத்துக்கொண்டு எதிரியைக் களைப்படைய வைத்து தோற்கடிப்பது தான் மொஹமட் அலியின் யுக்தி என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். …
Read More »மைத்திரி இருந்திருந்தால் பிரபாகரன் இலகுவாக வென்றிருப்பார்: மஹிந்த
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் பிரபாகரன் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்பார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத ஆட்சியே தற்போது நடைபெறுகின்றது. மைத்திரி ஜனாதிபதியாக வந்தவுடன் ரணிலை பிரதமராக்கினார். இப்போது பிரதமரை …
Read More »எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமீன் இல்லை: உச்சநீதிமன்றம்!
பெண் பத்திரிக்கையாளர்களை குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார் எஸ்.வி.சேகர். இதையடுத்து தமிழகம் முழுக்க எஸ்.வி.சேகருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்ததால், சில நாட்கள் தலைமறைவாகியிருந்தார் எஸ்.வி.சேகர். அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.வி.சேகருக்கு …
Read More »