Wednesday , October 15 2025
Home / செய்திகள் (page 181)

செய்திகள்

News

இவ்வருட சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சார்த்திகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்ள விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்பதிவு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உரிய காலத்திற்குள் விண்ணப்பித்தால் பரீட்சார்த்திகளினதும் ஆட்பதிவு திணைக்களத்தினதும் பணிகள் மிகவும் சிரமமின்றி அமையும் என்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.வி. குணதிலக தெரிவித்துள்ளார். மேலும், இந்த வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர …

Read More »

வவுனியாவில் கிணற்றில் மிதந்த இளைஞனின் சடலம்

இச்சம்பவம் நேற்று காலை 10மணியளவில் இடம்பெற்றுள்ளது வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையில் உள்ள மைதானத்தில் இருக்கும் கிணறு ஒன்றில் மகாறம்பைகுளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய அனோஜன் (டிலக்சன்) இளைஞனே மேற்படி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் மகாறம்பைகுளம் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தவரென்றும் நேற்று மாலை வேப்பங்குளம் பகுதியில் உள்ள அவர்கட்கு சொந்தமான காணி ஒன்றை பார்வையிட்டு வருவதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட இளைஞனே சடலமாக …

Read More »

நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணியைச் சேர்ந்த அந்த முன்னாள் பெண் போராளி 2011ல் புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளால் ஒரேயொரு தையல் இயந்திரம் மாத்திரமே வழங்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏழு ஆண்டுகளாக போரில் ஈடுபட்ட குறித்த முன்னாள் பெண் போராளிக்கு தையலில் ஈடுபடுவதில் ஆர்வம் இருக்கவில்லை. இதனால் இவர் தையலில் ஈடுபடாமல் கோழி வளர்க்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் …

Read More »

பொறுப்பற்று வேற்றுமையில் மூழ்கியுள்ள பொறுப்புள்ளவர்கள்

“மக்கள் போராட்டம் வெடிக்கும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா அவ்வப்போது கூறுவது உண்டு. நிலமீட்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம், நுண்நிதிக் கடனைத் தடை செய்யக் கோரும் போராட்டம் எனப் பல போராட்டங்கள் நாளாந்தம் வடக்கு, கிழக்கில் நடைபெற்று வருகின்றன. அவற்றில் சில, வருடத்தைக் கடந்தும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அதன் வரிசையில், தமிழர் பிரதேசங்களின் கடல் பிரதேசத்தைப் படையினரின் …

Read More »

ஐரோப்பாவின் புதிய சட்டம் இந்தியாவை பாதிக்குமா?

ஐரோப்பிய யூனியனின் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை என்ற புதிய சட்டம் இந்திய தொழில் நிறுவனங்களுக்கு சில பிரிவுகளில் மறைமுகமாவும், நேரடியாகவும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஐரோப்பிய யூனியன் தரவின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த சட்டம் ஐரோப்பிய யூனியன் மற்றுமன்றி மற்ற நாடுகளும் பெரிதும் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் பொது தரவு பாதுகாப்பு ஒழுக்குமுறை சட்டத்தை கடந்த …

Read More »

ரூ.750 கோடி இழப்பீடு: வேதாந்தா நிறுவனத்திற்கு செக்?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட போது வெடித்த கலவரம் காரணமாக 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் பிறகு அரசு மீது எழுந்த விமர்சனங்கல் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில், ஸ்டெர்லைட் ஆலையின் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக ரூ.750 …

Read More »

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தற்போதைக்கு ஆபத்து இல்லை; தமிழ் நாட்டிற்குத்தான் ஆபத்து

காஞ்சிபுரத்தில் மறைந்த முன்னால் மாவட்ட திமுக அவைத் தலைவர் CVM பொன்மொழியின் திருஉருவபடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நடந்த பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் பேசினார். 18 MLA க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு தற்போதைக்கு ஆபத்தில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  எப்போது இந்த ஆட்சி மாறும் என் மக்கள் கேட்பதாகக் கூறிய மு.க.ஸ்டாலின், …

Read More »

யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு – ஐந்து பேர் கைது

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மல்லாகம் பகுதியிலுள்ள தேவாலயத்தில் நடந்த திருவிழாவின் போது, இளைஞனர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்த போதும், திட்டமிட்டு சுட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய …

Read More »

வவுனியாவில் அடுத்தடுத்து சோகம்: மற்றுமொரு சிறுமியும் உயிரிழப்பு

இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சகோதரியும் சற்றுமுன் இருதய நோயினால் உயிரிழந்துள்ளார். வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் கடந்த 22.05.2018 அன்று சகோதரிகளில் 8 வயதான தன்சிகா என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேவேளை மற்றைய சகோதரியான 7வயதான சரனிக்கா எனும் சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் …

Read More »

​நடிகை கஸ்தூரி வீட்டை முற்றுகையிட்ட திருநங்கைகள்!

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பான இருநீதிபதிகளின் தீர்ப்பு குறித்து, நடிகை கஸ்தூரி அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது அந்த டிவிட்டர் பதிவில் நடிகை கஸ்தூரி திருநங்கைகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி போயஸ் கார்டன் பகுதியில் உள்ள நடிகை கஸ்தூரியின் வீட்டை, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த திருநங்கைகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Read More »