Tuesday , October 14 2025
Home / செய்திகள் (page 142)

செய்திகள்

News

பிளந்தது மஹிந்த-மைத்திரி அணிகள்? திடுக்கிடும் தகவல்

அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் மைத்திரி – மஹிந்த அணிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி கடந்த 26ஆம் திகதி ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. …

Read More »

மக்கள் போராட்டத்தினை கைவிடாது தொடர்ந்து போராட வேண்டும்: ரணில்

Ranil

ஜனநாயகத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடும் மக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிடாது தொடர வேண்டுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பநிலை தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) விசேட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ரணில், தொடர்ந்து போராடினால் ஏகாதிபத்தியர்களின் கைகளுக்கு ஆட்சி செல்வதைத் தடுக்க முடியும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டில் ஜனநாயகம் பணயக் கைதியாகி இன்றுடன் 13 நாட்கள் ஆகின்றன. இந்த இருள் சூழ்ந்த …

Read More »

சிறிசேன சற்றுமுன் ரணில் தரப்புக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைச் சீண்டவேண்டாமென்றும் அதனால் விளைவுகள் விபரீதமாகிவிடும் என்றும் ரணில் தரப்பை கடுமையாக எச்சரித்துள்ளார். இன்று மாலை இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதே மைத்திரி மேற்கண்டவாறு கூறினார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நாங்கள் நிரூபிப்போம். இதனை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பல்வேறு வித்தைகளை காட்டி ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார் ரணில். நான் அதற்கு கடைசி வரை …

Read More »

விஜய் அழுது புரண்டாலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது: ஜெயகுமார்

சர்கார் திரைப்படம் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் இசை வெளியீட்டு விழாவின் போது கூறியது போலாவே சர்கார் படத்தில் அரசியல் மெர்சலாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் தற்போது எதிர்ப்புகளாக வெளிவருகிறது. குறிப்பாக சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் கடுப்பான ஆளுங்கட்சி அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் படத்தின் மீது வழக்கு தொடரப்படும் என மிரட்டி வருகின்றனர். இதற்கு ஒரு படி …

Read More »

ஓடாத படத்தை ஓட வச்சிராதீங்க: சர்கார் படம் குறித்து டிடிவி

விஜய் நடித்த ‘சர்கார்’ படத்திற்கு அரசியல்வாதிகள் குறிப்பாக அதிமுக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ‘மெர்சல்’ போல் இந்த படமும் அரசியல்வாதிகளால் சூப்பர் ஹிட் ஆகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்து கருத்து கூறிய டிடிவி தினகரன், ‘சர்கார்’ திரைப்படம் மக்களுக்கு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்ல, ஒரு வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் …

Read More »

மஹிந்த குறித்து ரணிலின் மிக முக்கிய செய்தி

மகிந்தவிற்கு

எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த ராஜபக்ஸவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் வழங்கியுள்ள செவ்வியில், “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவருக்கே பிரதமர் பதவியை ஏற்க முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அதாவது 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய பிரதமர் ஒருவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு …

Read More »

கொழும்பிற்குள் நுளைந்தார் சந்திரிக்கா!! அடுத்து என்ன நடக்கும்??

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரனதுங்க, மாதுலுவாவே சோபித தேரர் நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதுலுவாவே சோபித தேரர் நினைவுக் கூட்டம் தற்போது புதிய நகர மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட அரசியல் முக்கியஸ்தர்கள், ராஜதந்திரிகள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். இதேவேளை கடந்த மாதம் …

Read More »

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்! ஐக்கிய தேசிய கட்சி அறிவிப்பு

maithiri ranil

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாம் தயாராகவே இருக்கிறோம் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதியின் செயற்பாட்டால் சர்வதேச ரீதியாக நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, “சர்வதேசம் இலங்கைக்கான முதலீடுகளை நிறுத்தியுள்ளது. நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள …

Read More »

தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரிடம் விலை போயுள்ளது?

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையாக செயற்பட்டாலே போதும், அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை நாம் பெற்றுத்தருவோம். அரசியல் தீர்வு விடயத்தில் மைத்திரி -மஹிந்த கூறுவதையே சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியிடம் விலை போயுள்ளார் ஒரு சிலர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவரையும் தவறாக வழிநடத்தி …

Read More »

மிரட்டும் மைத்திரியால் பதறும் உறுப்பினர்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரம் அடைந்துள்ளது. இலங்கையின் சமகால பிரதமர் யார் என்பது தொடர்பான அதிகார போட்டியால் கொழும்பு அரசியல் பெரும் பதற்ற நிலையை அடைத்துள்ளது. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்திற்கு அமைய எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளும் பலரை பீதியில் ஆழ்த்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிற்கு பிரதமர் பதவி கிடைக்கும் என்பது பலரின் …

Read More »