மாலைதீவு ஜனாதிபதியாக இம்ராஹிம் முகமது சோலி நேற்று பதவியேற்றார். இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்சவும் செல்வார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் அவர் கலந்து கொள்ளவில்லை. நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். அத்துடன், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் மஹிந்த …
Read More »கஜா புயல் நிவாரணம்:மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி பாராட்டு
நேற்று தமிழகத்தின் வழியாக கரையை கடந்த கஜா புயலால் 13 உயிரிழந்தனர். ஏராளமான மக்கள் வெள்ளம் மற்றும் புயலால் வீடுகளை இழந்துள்ளனர். யானையின் தும்பிக்கைபோலவே இருந்த கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நிவாரண உதவிகள் அரசு சார்பில் மட்டும் இல்லாமல் பல தரப்பினரும் மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ரஜினியின் மக்கள் மன்றம் மக்களுக்குபல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள …
Read More »மீண்டுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை அவசியமில்லை!
புதிய அரசாங்கத்தை என்னால் விரைவில் அமைக்க முடியும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளதால் மீண்டுமொரு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்களிடம் போதிய உறுப்பினர்கள் உள்ளனர் எங்களால் தொடர்ந்து செயற்பட முடியும் இதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு அரசியல் ஸ்திரதன்மை அவசியம் என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க …
Read More »சபாநாயகர் பதவி விலக வேண்டும்! ஆளும்கட்சியின் எதிர்ப்பு
சபாநாயகரின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் விரைவில் ஒன்றுகூடி தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக ஆளும்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குழப்ப நிலைதொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் பிரகாரம் செயற்படாவிடில் சபாநாயகர் பதவி விலக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற எந்த செயற்பாடும் சட்டரீதியாக இடம்பெறவில்லை. இந்த செயற்பாடுகளை தொடர்ந்தும் சபாநாயகர் தாமாகவே பதவி விலக வேண்டும் …
Read More »பொறுப்புகளை விட்டுக்கொடுக்க தயார் மஹிந்தவின் திடீர் அறிவிப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பொருட்டு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை விட்டுக் கொடுக்கவும் தயார் என மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற அரச ஆதரவு கட்சித் தலைவர்கள் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சிறுபான்மை சமூகத்தின் கட்சிகளை அரசாங்கத்திற்குள் இணைப்பது தொடர்பாக அவர்களுடன் மீண்டும் …
Read More »கூட்டமைப்பை மீண்டும் அவசரமாக சந்திக்கின்றார் மைத்திரி!
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஜனாதிபதி நாளை கோருவார் …
Read More »ஸ்டாலினின் அந்த ஒத்த வார்த்தை: குஷியான அமைச்சர் ஜெயகுமார்
திமுக தலைவர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. தமிழக அரசின் போதிய முன்னேற்பாடு நடவடிக்கையால் பல அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. அதேபோல் பல இடங்களில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை என …
Read More »கஜா புயல்: தமிழக அரசை பாரட்டிய கமல்!
கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. தமிழக அரசின் போதிய முன்னேற்பாடு நடவடிக்கையால் பல அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் மீட்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலையில் விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …
Read More »வவுனியாவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் மோதல்
வவுனியாவில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிலர் குழப்பம் விளைத்து மோதலில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். பாடசாலைக்கு வழங்கப்படுகின்ற சத்துணவு திட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக போலியான குற்றச்சாட்டை முன்வைத்தமைக்கு எதிராக வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, அவ்விடத்திற்கு வருகை தந்த சிலர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களோடு வாய் தர்க்கத்தில் ஈடுபட்டமையால் இருதரப்பினருக்கும் இடையில் மோதல் …
Read More »பாராளுமன்றத்தில் அரங்கேறும் கொலை வெறித்தாக்குல்! உச்சத்தில் மகிந்த அணியினர்
பாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கூடவிருந்த நிலையில், சபாபீடத்தில் ஆளுந்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் தமதமாகின. பாலித தேவரப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரை கைதுசெய்யவேண்டும் எனக்கோரி ஆளுந்தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருந்த அக்கிராசனத்தைச்சுற்றி ஏனைய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவர்களும் கூடிநின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் செங்கோலுடன் சபாநாயகர் …
Read More »