Tuesday , October 14 2025
Home / செய்திகள் (page 102)

செய்திகள்

News

யாழ். மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு புதிய தீர்வு

யாழ். மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கீழ் பாளியாறு நீர்த்தேக்கத்தை நீர்மாணிக்கவுள்ளதாக தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மற்றும் வட. மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வடக்கில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் 60 ஆயிரம் பேர் வரையிலான மக்கள் நிலக்கீழ் நீரின் மூலமாக தமது நாளாந்த தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள். இந்த நிலக்கீழ் நீர் எதிர்வரும் 10 முதல் 20 வருட காலத்திற்கு மாத்திரமே போதுமானதாக இருக்குமென …

Read More »

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான வரப்பிரசாதம் : தடுத்து நிறுத்திய மைத்திரி!!

Maithripala Sirisena

சர்வதேச தொலைபேசி அழைப்புக்களுக்கான வரியை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான வரியை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர யோசனை முன்வைத்திருந்தார். இவ்வாறு வரியை தளர்த்துவதன் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளவர்கள், இலங்கையில் உள்ள தங்கது உறவுகளுடன் குறைந்த செலவில் பேச முடியும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் …

Read More »

மைத்திரிக்கு இன்று ஆப்பு வைக்க காத்திருக்கும் ரணில் அணி

maithiri ranil

நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதம் இன்று இடம்பெறுகிறது. இன்றைய தினம் அரசியலரங்கில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஜனாதிபதியின் கீழ் உள்ள சுற்றாடல், பாதுகாப்பு அமைச்சுக்களிற்கான நிதி ஒதுக்கீட்டில் எந்த சிக்கலும் இருக்காதென தெரிகிறது. எனினும், ஜனாதிபதிக்கான விசேட ஒதுக்கீடுகளிற்கு ஐ.தேக.வின் எம்.பிக்கள் குழுவொன்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இன்றைய தினம் அவர்கள் வாக்கெடுப்பை கோருவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. ஐ.தே.கவின் சுமார் 45 எம்.பிக்கள், ஜனாதிபதிக்கான …

Read More »

இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை கோரும் அமெரிக்கா!

இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகவே, இந்த தொகையினை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் ஆகியவற்றுக்கு 40 பில்லியன் டொலரை ஒதுக்கீடு செய்யுமாறு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில், …

Read More »

நாடாளுமன்றத்தை புறக்கணித்த மைத்திரி

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை. குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணயிலிருந்து இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தே இன்றைய விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை, குழுநிலை விவாதங்களின்போது தோற்கடிக்கப் போவதாக ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். …

Read More »

வெற்றிலை பாக்கினை விற்பனை செய்வதற்கு சில இடங்களில் தடை

அரச நிறுவன வளாகங்களில் வெற்றிலை பாக்கினை பயன்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது. அதற்கமைய வெற்றிலை பாக்கினை அரச நிறுவன வளாகங்களில் பயன்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More »

ஆசிரியர்களின் செயற்பாடுகளில் மனித உரிமைகள் என்ற விடயம் தலையிடுவது தவறு

ஜனாதிபதி

மனித உரிமைகள் என்ற விடயம் முறையின்றி ஆசிரியர்களின் செயற்பாடுகளில் தலையீடு செய்வதனால் சிறந்தவொரு ஒழுக்கமுள்ள எதிர்கால தலைமுறையினை கட்டியெழுப்புதல் தற்போது சவால்மிக்கதாக காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எமது நாட்டில் அன்று முதல் பிள்ளைகளின் ஒழுக்கமானது பாடசாலைகளினால் பேணப்பட்டு வருகின்றது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தற்செயலாக இடம்பெறும் சில தவறுகளுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் சமூகத்தினுள் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் சிறந்ததோர் ஒழுக்கமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு …

Read More »

கண்காணிப்பு என்ற பெயரில் கால அவகாசம் !!

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள புதிய தீர்மானமானது, கால அட்டவணையுடன் இருந்தால் அதனை பரிசீலிக்க முடியுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கால அட்டவனையுடன் தீர்மானம் வந்தாலும் இலங்கை அரசாங்கம் அதனை எந்தளவுக்கு சாத்தியமாக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் இவ்விடயங்களைக் …

Read More »

இலங்கையில் 54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

இலங்கையின் பொலிஸ் துறையில் கடமையாற்றும் 54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் குறித்த இடமாற்றத்திற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, குறித்த இடமாற்றம் கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டு மறுதினம் இரத்து செய்திருந்த நிலையில் மீண்டும் சில திருத்தங்களுடன் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More »

இலங்கையில் பெண்களுக்காக அறிமுகமாகும் புதிய சேவை!

இலங்கையில் பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவையொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான 25 முதல் 30 பஸ்களை ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பஸ் சேவையானது, தெரிவுசெய்யப்பட்ட நகரங்களிலும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து …

Read More »