தற்போதுள்ள அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதை விடுத்து முழுமையாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜென வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்சின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசியலமைப்பின் ஊடாக அர்த்தமுள்ள வகையில் …
Read More »நீர்ப்பிரச்சினையை எதிர்நோக்கவுள்ள வடக்கு, கிழக்கு
வடக்கு கிழக்கு மாகாணங்கள் அடுத்துவரும் மாதங்களில் மிகப்பெரிய நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். சித்திரை சிறுமாரி சிலவேளை பெய்யாவிட்டால் அல்லது தீவுப் பகுதிக்கு முதலாவது இடைநிலைப் பருவகால மழை கிடைக்காவிட்டால், மே ஆரம்பப் பகுதியில் நீர்ப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாத காலப் பகுதியில் சூரியன் வானில் …
Read More »மக்களுக்குப் பின்னால் ஒழிந்து நிற்கின்றது கூட்டமைப்பு; சிவசக்தி ஆனந்தன்
மக்களை வழிநடத்த வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு பின்னால் ஒழிந்து நிற்கின்ற நிலையில், தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்களுக்காக வீதியில் நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்சி ஒரு கொள்கையை நோக்கியே மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டுமே ஒழிய, மக்களுக்கு பின்னால் ஒழிந்து நிற்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் நேற்றைய தினம் …
Read More »கட்சியின் மே தினக் கூட்டம் இல்லை, அழைத்தால் எதற்கும் செல்வேன்-ஹக்கீம்
மே தினத்தன்று தனது கட்சி எந்தவொரு கூட்டத்தையோ, நிகழ்வுகளையோ நடாத்துவதில்லையெனவும் தமது கட்சிக்கு அழைப்பு விடுக்கும் எந்தவொரு கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே இவ்வாறு கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் வெளியேறிச் செல்லும் போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
Read More »நல்லிணக்கம் ஆன்மீக தலைவர்களின் முக்கிய பணியாக வேண்டும்- ஜனாதிபதி
நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்மீக தலைவர்களாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் திரிபிடகம், விவிலியம்,அல்குர்ஆன் மற்றும் பகவத் கீதையில் நாம் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி,பௌத்த பிக்குகள், இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமயத் தலைவர்களுக்கு இதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்ளது என்றும் தெரிவித்தார். நேற்று தங்கொடுவை சிங்கக்குளியில் நடைபெற்ற …
Read More »மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறைப்படியே- அரசாங்கம்
காலாவதியாகவுள்ள வட மத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் நடைமுறையிலுள்ள விருப்பு வாக்கு முறைமையின் அடிப்படையிலிலேயே இடம்பெறும் என உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா அறிவித்துள்ளார். இந்த மூன்று மாகாண சபைகளினதும் ஆயுட்காலம் இவ்வருடம் செப்டம்பர் மாதம் நிறைவடைகின்றது. இதனால், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் இந்த தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடாத்துவது தொடர்பான …
Read More »எட்கா உடன்படிக்கை: இறுதி தீர்மானம் எடுக்க பிரதமர் இந்தியா பயணம்
இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறவுள்ள தொழில்நுட்ப ஒப்பந்தம் (எட்கா) தொடர்பில் இறுதித் தீர்மானங்களை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமரின் ஜப்பானுக்கான விஜயம் நிறைவடைந்த பின்னர் இந்தியா செல்லவுள்ளார். இவ்விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் பிரதமர் ரணில் சந்திக்கவுள்ளார். இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளமைக்கு பிரதமர் இதன் பொது அழைப்பு …
Read More »புத்தளம் வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
புத்தளம் ஆதார வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யுமாறு கோரியும், வைத்தியசாலையை மாவட்ட பொது வைத்தியசாலையாக தரம் உயர்த்த கோரியும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள பிரதான சுற்று வட்டத்துக்கு அருகில் நேற்று (வெள்ளிக்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச சுகாதார தினத்தை முன்னிட்டு புத்தளம் இளம் பிரஜைகள் சங்கம் குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளிக்கு முன்பாக இருந்து புறப்பட்ட …
Read More »கோலாகலமாக நடைபெற்ற திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தேர் திருவிழா
64 சக்தி பீடங்களில் ஒன்றான திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று (சனிக்கிழமை) பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அதிதியாக கலந்துகொண்டதோடு, ஆயிரக்கணக்கான பக்த அடியார்களும் கலந்துகொண்டிருந்தனர். அத்தோடு, அம்பாளின் இரதத்தின் முன்பாக சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. கடந்த மாதம் 30ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமான பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த …
Read More »சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு அவுஸ்ரேலியா உதவி
சிறிலங்காவில் பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு, அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து 15 மில்லியன் டொலர் உதவியை வழங்க அவுஸ்ரேலியா முன்வந்துள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் உள்ளூர் தனியார் நிறுவனங்கள் பெண் பணியாளர்களை பணிக்கு அமர்த்திக் கொள்வதற்கான, வேலைத் திட்டத்தில் பெண்கள் என்ற திட்டத்தின் கீழ் இந்த நிதிஉதவி வழங்கப்படவுள்ளது. சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தியில், தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், பெண்களை வலுப்படுத்தும் வகையிலும் இந்த திட்டத்துக்கு அவுஸ்ரேலியா உதவும் …
Read More »