Sunday , June 22 2025
Home / தமிழ்மாறன் (page 92)

தமிழ்மாறன்

மீத்தொட்டமுல்லை அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு நாளை முதல் வீடுகள் ; ஜனாதிபதி பணிப்புரை

மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்து அனர்த்தத்திற்குள்ளான மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி முழுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்தத்திற்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக இன்று (19) முற்பகல் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார். மீத்தொட்டமுல்லை பிரதேசத்தில் இடர் வலையத்திலுள்ள மக்களை மீட்பதற்கு முன்னுரிமையளித்து …

Read More »

ஸ்ரீலங்கா, இந்தியாவிற்கு இடையில் பொருளாதார உடன்படிக்கை?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீலங்காவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின்போது, கூட்டு அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்தியாவின் த வயர் (The Wire) இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கடன் சுமையில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கா சீனாவின் பிடியில் இருந்து விடுபடுவது கடினமானது என்பதால், இதனைச் சமநிலைப்படுத்தும் வகையில், திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ரீலங்கா முன்வந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் …

Read More »

கட்டடத்தை அகற்றுக; சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்முனை கல்வி வலயத்திலுள்ள சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் கட்டடம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலைக்கு முன்பாக வீதியின் ஓரமாக அணிவகுத்து பல்வேறு சுலோகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நிலவும் வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இருமாடிக் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக அண்மையில் அடிக்கல் …

Read More »

நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளம்; புகையிரத கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எந்தவொரு சலுகையுமின்றி தங்களை அடிமைகளாக, கட்டாயப்படுத்தி நல்லாட்சி அரசாங்கம் வேலை வாங்குவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகையிரத கடவை ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். விடுமுறை எதுவுமின்றி நாளொன்றுக்கு 250 ரூபா சம்பளத்திற்காக வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கடந்த நான்கு வருடங்களாக தற்காலிகமாக புகையிரதக் கடவைக் காப்பாளர்களாக கடமை புரிவோரை நிரந்தர நியமனமாக்குமாறு கோரி, மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்னால் …

Read More »

கோப்பாபுலவு மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பான கூட்டம் ஆரம்பம்

இராணுவத்தினர் வசமுள்ள கோப்பாபுலவு மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. எனினும் இந்த கூட்டத்தில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் 50 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், …

Read More »

பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லை – கோட்டாபய ராஜபக்ஷ

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லையென வெளியான செய்தி உண்மையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொட்டு அம்மான் குறித்து பலவாறான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லையென குறிப்பிட்டுள்ள கோட்டா, அதன் காரணமாகவே அவர் உயிருடன் உள்ளாரென தெரிவிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். …

Read More »

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் தீர்வின்றி 28ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது

கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் ஆரம்பித்த கவனஈர்ப்பு போராட்டம் தீர்வின்றி 28ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்கிழமை) தொடர்கிறது. மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து சுமார் 27 வருடங்களாக பன்னங்கண்டி பகுதியில் வாழ்ந்து வரும் மக்களே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சிவா பசுபதி கிராம மக்களுக்கு காணிகளை வழங்குவதாக உரிமையாளர் குறிப்பிட்டுள்ள நிலையில், தற்போது தமக்கும் தீர்வு வேண்டுமென கோரி சரஸ்வதி கிராம மக்கள் மற்றும் ஜொனி குடியிருப்பு மக்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தாம் …

Read More »

பொத்துவில் – பானம பகுதியில் படகு சவாரியில் ஈடுபட்ட இளைஞன் விபத்துக்குள்ளாகி மரணம்

அம்பாறை பொத்துவில் – பானம பகுதியில் உள்ள ஆற்றில் படகு சவாரியில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றதாகவும் உயிரிழந்தவர் பானம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்களுடன் சேர்ந்து குறித்த பகுதியில் உள்ள ஆற்றில் இளைஞர்கள் சிலர் படகு போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, படகு ஒன்று சமநிலை இழந்ததன் காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த …

Read More »

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு மீனவர்கள் 13 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். புல்மோட்டை கொடுவகட்டுமலை கடற்பகுதியில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, மூன்று படகுகளையும் தடை செய்யப்பட்ட வலைகளையும் 350 கிலோ நிறை கொண்ட மீன்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் மீட்கப்பட்ட படகுகள், வலைகள் மற்றும் மீன்களையும் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்துக; அரசாங்கத்திடம் கோரிக்கை

ஸ்ரீலங்காவில் பல்வேறு பாகங்களிலும் இன்புளுவென்ஸா தொற்று வேகமாக பரவிவருகின்ற நிலையில் அதனைக் கருத்திற்கொண்டு அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறிவிட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஸா இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறித்த வைரஸ் தொற்றினால் பலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு …

Read More »