ஜனாதிபதி எனக்கு இந்த அமைச்சை விட்டுச் செல்லுமாறு கூறினால், செல்லத் தயார் என துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் இந்த அரசாங்கத்தை பெரும் எதிர்பார்ப்புடன் அமைத்தோம். குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பில் நானும் இன்னும் மனவேதனையுடன் தான் உள்ளேன். கடந்த …
Read More »எத்தனை துன்பங்கள் வந்தாலும் போராட்டம் தொடரும்: முள்ளிக்குளம், மறிச்சிக்கட்டி மக்கள்
பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்யப்படும் வரை நிலமீட்பு போராட்டம் தொடரும் என முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி மக்கள் தெரிவித்துள்ளனர். முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 30 ஆவது நாளாகவும், மறிச்சிக்கட்டி பகுதியில் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றுடன் 26 ஆவது நாளாகவும் தொடர்கின்றன. தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற முள்ளிக்குளம் மக்களின் நில மீட்பு போராட்டமும், முசலிப்பிரதேச மக்களின் …
Read More »இறக்காமத்தில் தொடர்ந்தும் அத்துமீறல்: கிழக்கு சுகாதார அமைச்சர் நேரடி விஜயம்
இறக்காமம் பிரதேசத்தில் ஜந்து பேர் கொண்ட புத்தமதகுருமார் குழுவொன்று தனியார் காணியொன்றிற்குள் சட்டவிரோதமாக அத்துமீறி பிரவேசித்ததுடன் கட்டிடமொன்றையும் நிர்மாணிக்க முற்பட்டிருந்தனர். சட்டவிரோத சிலை நிறுவல் தொடர்பான சர்ச்சையை மீண்டும் முன்னெடுக்கும் வகையில், சட்டத்தை மீறும் வகையில் காணியினை சுற்றி சுத்தம் செய்தமை தொடர்பாக நேற்றைய தினம் (வியாழக்கிழமை) அப்பகுதி மக்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் நிலைமைகளை …
Read More »கோப்பாயில் சட்டவிரோத மதுபான உற்பத்தி: இருவர் கைது
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைப் பிராய் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த குற்றச்சாட்டில் கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மது உற்பத்தியை தடுக்க பொது மக்கள் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இதேவேளை குறித்த நபர்களின் வீட்டினை நேற்று (வியாழக்கிழமை) சுற்றிவளைத்த பொலிஸார், 1 இலட்சத்து 61 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு …
Read More »புலிகளில் கவனம் செலுத்தியதால் குப்பையில் கவனம் செலுத்தவில்லை – மகிந்த சொல்கிறார்
யுத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியமையினாலேயே மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக கவனத்தினைச் செலுத்த முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் ஸ்ரீமகா விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் நாட்டினது பிரதானமான பிரச்சினையிலேயே அதிக கவனத்தினைச் செலுத்தியிருந்தோம். அதன்படி யுத்தத்தினையும் நிறைவுக்கு கொண்டுவந்திருந்தோம். …
Read More »அரசாங்கத்தினது எந்த உதவித்திட்டங்களும் எமக்குத் தேவையில்லை: பன்னங்கண்டி மக்கள் தெரிவிப்பு
ஒரு மாத காலத்திற்கு மேலாகப் போராடிவரும் எமக்கு, இந்த அரசாங்கம் வழங்கும் வீட்டுத்திட்டம் போன்ற உதவித்திட்டங்கள் தேவையில்லை, நாம் உழைத்து முன்னேறுவோம். என பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர். தமக்கான காணி உறுதியினை மட்டும் தற்போதைக்கு பெற்றுத்தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 31ஆவது நாளாகவும் தொடர்ந்து வருகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இது குறித்துத் தெரிவிக்கையில், …
Read More »வவுனியாவில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலயம் திறந்து வைப்பு
வவுனியா இளைஞர் சேவைகள் மன்றத்தில் இளைஞர் கழக சம்மேளனக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த காரியாலயம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளன மன்றத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன், தர்மபால செனவிரத்தின ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், முன்னாள் நகர சபை உபபிதா …
Read More »மீத்தொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் உடனடியாக 60 வீடுகளைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி பணிப்பு
மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் சலுகை அளிப்பது தொடர்பில் நேற்று இடம்பெற்ற முன்னேற்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், முழுமையாக பாதிக்கப்பட்ட 60 வீடுகளில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்காக வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனையின் பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்வுள்ளது. வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக இரண்டரை இலட்சம் ரூபாவும் அவற்றை கொண்டு செல்வதற்காக 10, 000 …
Read More »முஸ்லிம்களின் வாக்குகளால் சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவேன் – மஸ்தான் எம்.பி
முஸ்லிம்களின் வாக்குகளால் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த போவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற மே தினம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்களுடான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்குகள் 12 வீதமாக காணப்பட்டது. எனினும், தற்போது, 4 …
Read More »இடைக்கால அறிக்கை இரண்டு வாரத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்
அரசியல் யாப்பின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்னமும் இரண்டு வார காலங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும் திருத்தங்களை மேற்கொள்வதா அல்லது அதனை அவ்வாறே அமல்படுத்துவதா என்பது குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இன்றைய சந்திப்பின் போது, ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பு உருவாக்க நடைமுறையானது, தற்போது …
Read More »