நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் முதலாவது மின் பிறப்பாக்கி செயலிழந்திருந்த நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு இன்று (சனிக்கிழமை) வழமைக்கு திரும்பும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள முதலாவது மின் பிறப்பாக்கியில் கடந்த 17ஆம் திகதி, ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைபட்டது. இருப்பினும் இதற்கான மாற்று வழிககள் கடைபிடிக்கப்பட்டாலும், இதன் மீள் திருத்த …
Read More »தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியம்
தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியமாக உள்ளது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும், வட.மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் துருக்கி தூதுவர் வினவியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த முதலமைச்சர், “முன்னைய …
Read More »ஊர்காவற்துறை மாணவர்களுக்கு துருக்கி அரசால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு
ஊர்காவற்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட 3 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் துருக்கி நாட்டினால் வழங்கி வைக்கப்பட்டன. துருக்கி நாட்டு அரசாங்கமும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வு, யாழ்.வேலணை மத்திய கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்கா, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஸே;வரன், அமைச்சின் …
Read More »உலகின் மிக வயதான ராணி லிசபெத்துக்கு 91 வயது
உலகின் மிக வயதான ராணி எலிசபெத்துக்கு 91ஆவது வயது பிறந்தது. அதையொட்டி பக்கிங்காம் அரண்மனையில் தனது பிறந்த கேக் வெட்டி குடும்பத்தினருடன் கோலாகலமாக கொண்டாடினார். இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி லண்டனில் பிறந்தார். இவரது முழுப் பெயர் எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி. இவரது தந்தை மன்னர் 4ஆம் ஜார்ஜ் மறைவுக்கு பிறகு 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் திகதி இங்கிலாந்து ராணியாக முடி …
Read More »சோமாலியாவில் வரலாறு காணாத பஞ்சம்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிகழும் பஞ்சம் அந்நாட்டின் வரலாற்றில் காணாத பஞ்சமாக மாறியுள்ளது. சோமாலியாவில் நிகழும் கடும் பஞ்சத்தால் சுமார் 2,70,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்படவுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் குழந்தைகள் நல உலக அமைப்பான யூனிசெஃப் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் சோமாலியாவில் நிகழும் கடும் பஞ்சத்துக்கு இடையே சுகாதார சீர்கேடு காரணமாக நோய் தொற்று ஏற்பட்டு மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக கார்டியன் செய்தி …
Read More »சாதாரணதரத் தேர்வு முடிவுகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் படுமோசம்
அண்மையில் வெளியான கபொத சாதாரண தரத் தேர்வு முடிவுகளில், திருகோணமலை கல்வி வலயத்தைச் சேர்ந்த ஐந்து பாடசாலைகளில் இருந்து எந்தவொரு மாணவரும் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016 டிசெம்பர் மாதம் நடைபெற்ற கபொத சாதாரண தரத் தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தன. இந்த தேர்வு முடிவுகளைப் பகுப்பாய்வு செய்த போது, நாடெங்கும் 131 பாடசாலைகளில் இருந்து எந்தவொரு மாணவரும், கபொத உயர் தரம் …
Read More »குப்பைமேடு சரிந்த இடத்தில் பரவியுள்ள மீதேன் வாயு – ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை
மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த பகுதியில் மீதேன் வாயுவின் அளவு அதிகமாக இருப்பதாக ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீதொட்டமுல்லைவில் கடந்த 14ஆம் நாள் குப்பை மேடு சரிந்த விபத்தில் 32 பேர் மரணமாகினர். மேலும் 30இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில், சிறிலங்கா பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, ஜப்பான் நிபுணர்கள் குழுவொன்றை சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளது. நேற்று முன்தினம் கொழும்பு வந்த ஜப்பானிய நிபுணர்கள் நேற்று இரண்டாவது நாளாக …
Read More »பலாலி விமான நிலையத்தை சுற்றியுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணி கூட்டமைப்பு – படையினர் இடையே பேச்சு இணக்கமின்றி முடிவு
பலாலி விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணிகள் தொடர்பில், பாதுகாப்புத் தரப்பினருடனான நேற்றைய கூட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தக் காணி தொடர்பில் உயர்மட்டப் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தரப்பினர், அரச அதிகாரிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடையிலான முத்தரப்புச் சந்திப்பு, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில், பலாலி விமான நிலையம் மற்றும் அனைச் சுற்றியுள்ள …
Read More »முள்ளிக்குளம் மக்களை சந்தித்த வடமாகாண ஆளுனர்
முள்ளிக்குளம் மக்களை நேரடியாக சந்தித்து போராட்டத்துக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தருவேன் என்று வடமாகாண ஆளுனர் உறுதியளித்துள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று மன்னாருக்கு வருகை தந்த வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே நேற்று மாலை நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் மக்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியுள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே …
Read More »தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் வேண்டுமென்றே இழுத்தடிப்பு; எம்.ஏ.சுமந்திரன்
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் துரிதமாக விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வு மூலமாவது தங்களை விடுதலை செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகள் தம்மிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் நேற்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு, அரசாங்கத்திடம் விடுதலை கோரும் தமிழ் …
Read More »