Sunday , June 29 2025
Home / தமிழ்மாறன் (page 80)

தமிழ்மாறன்

கள்ளக் காதலானை மனைவியுடன் சேர்த்துவைத்த கணவன்

மனைவியுடன் கள்ளக் காதலை சேர்த்துவைத்த கணவனின் செயற்பாடு மஹியங்கனை பகுதியில் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காலியில் இருந்து கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் மஹியங்கனைக்கு தொழில் தேடிச் சென்ற இளைஞன், மஹியங்கனையைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரை காதல் திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் 3 மற்றும் 5 வயதுகளில் குழந்தைகள் உள்ளன. குடும்ப கஷ்டம் காரணமாக குறித்த இளைஞன் மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்றுள்ளார். இக்காலப்பகுதியில் தனது குழந்தைகளுடன் …

Read More »

ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு பிரான்ஸ் நாட்டு அரசின் உயரிய கவுரவ விருது வழங்கியுள்ளது. ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு பிரான்ஸ் நாட்டு அரசின் உயரிய கவுரவ விருது வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்புக்காக தனது தொண்டு நிறுவனம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அர்னால்டின் சேவையை பாராட்டும் விதமாக பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே இந்த …

Read More »

சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் – புதின் அவசர ஆலோசனை

அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினும் டெலிபோனில் திடீரென பேசினர். அப்போது சிரியா போரை முடிவுக்கு கொண்டுவர ஆலோசனை நடத்தினார்கள். புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் ரஷியாவுடன் அமெரிக்கா நெருங்கிய நட்புறவுடன் உள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் அடிக்கடி டெலிபோனில் பேசி உலக நடப்புகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அவர்கள் இருவரும் திடீரென …

Read More »

கனடாவில் சீக்கிய மந்திரியை நீக்க எதிர்க்கட்சி வலியுறுத்தல்

கனடாவில் பொய்யான தகவல்கள் கூறியதாக புகார் தொடர்பாக சீக்கிய ராணுவ மந்திரியை நீக்க எதிர்க்கட்சி வலியுறுத்தி உள்ளது. கனடாவில் ராணுவ மந்திரியாக ஹர்ஜித் சஜ்ஜன் இருக்கிறார். சீக்கியரான இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் கனடா ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். மேலும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த நேட்டோ படை முகாமிலும் பணியாற்றி அனுபவம் பெற்றவர். இவர் இந்தியா வந்திருந்த போது ராணுவத்தில் தான் பணிபுரிந்த போது செய்த சாதனைகளையும், வீர தீர …

Read More »

வடக்கு- கிழக்கு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கடும் வறட்சி: 3 இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நிலவிவரும் கடுமையான வறட்சியினால் சுமார் 3 இலட்சம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 9 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், வடக்கில் சுமார் 4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 33 ஆயிரத்து 359 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு …

Read More »

உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகும்வரை பதவியை பறிக்க முடியாது: கீதா

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ள கீதா குமாரசிங்க, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் அடிப்படையில் இரட்டை குடியுரிமை உள்ள ஒருவர் இலங்கையின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது எனத் தெரிவித்த …

Read More »

சுமந்திரன் கொலை முயற்சி : சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 14 தினங்களுக்கு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில், நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் …

Read More »

பாதிக்கப்பட்ட மக்களை ஐ.நா. கண்டுகொள்வதில்லை: சி.வி. விசனம்

“மத்திய அரசுடன் சிறந்த உறவினை பேணிவரும் ஐக்கிய நாடுகள் சபை, போரினால் பாதிக்கப்பட்ட எம்முடன் மந்தமான உறவை பேணிவருவது மட்டுமன்றி, பல விடயங்கள் தொடர்பில் எங்களுடன் கலந்துரையாடாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஐ.நா. அபிவிருத்தி செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜாவிற்கும் இடையே முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. …

Read More »

அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை வட. மாகாணசபை தவறவிட்டுள்ளது: தவராசா

வடக்கு மாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததைவிட புதிதாக என்ன அபிவிருத்தியை கண்டிருக்கிறது என கேள்வி எழுப்பிய வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, அபிவிருத்திக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் வடக்கு மாகாணசபை தவறவிட்டிருக்கின்றது என குற்றஞ்சாட்டியுள்ளார். வட. மாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், …

Read More »

ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் முரண்படும் விதத்தில் பிரித்தானியா நடந்துகொள்ளாது!

பிரெக்சிற் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது விளக்கம் அளிக்கும் விடயத்தில், ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் முரண்படும் விதத்தில் பிரித்தானியா நடந்து கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் ஜேன் கிளாட் ஜங்கர் மற்றும் பிரித்தானிய பிரதமர் மே ஆகியோருக்கு இடையில் பிரெக்சிற் தொடர்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தியளிக்கும் வகையில் இருக்கவில்லை என, ஜேர்மனிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்தே மேற்குறித்தவாறு டோரிக்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றியத்தால் வெளியிடப்படும் பிரெக்சிற் விதிமுறைகளை பிரித்தானியா …

Read More »