வடக்கு கிழக்கில் வேலையற்ற நிலையில் பல இளைஞர்கள் வாழ்ந்துவரும் நிலையில், அங்குள்ள அலுவலகங்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணிக்கமர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கிளிநொச்சியில் உள்ள மத்திய அரசின் திணைக்களங்களில் நிரந்தர அலுவலக உதவியாளர்களாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது, அங்குள்ள வேலையற்ற இளைஞர்களை மட்டுமன்றி, குறித்த அலுவலகங்களில் பல வருட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி, இதுவரை காலமும் நிரந்தர நியமனம் கிடைக்காதவர்களிடையே பெரும் விசனத்தை …
Read More »ஈராக்கில் மேற்கு மொசூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 31 பேர் கொன்று குவிப்பு
ஈராக்கில் மேற்கு மொசூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்து போலீஸ் படை மீட்டுள்ளது. அப்போது நடந்த மோதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 23 பேர் கொல்லப்பட்டனர். ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மொசூல் நகரின் கிழக்கு பகுதியை ராணுவம் கடந்த ஜனவரி மாதம் மீட்டது. அதைத் தொடர்ந்து மேற்கு பகுதியையும் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து தங்கள் வசப்படுத்துவதற்காக ராணுவம் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. இந்த சண்டை தற்போது உக்கிரம் அடைந்துள்ளது. …
Read More »மூன்று கடற்கொள்ளையர்களை சீனா சோமாலியா அதிகாரிகளிடம் ஒப்படைத்தது
சந்தேகத்திற்கிடமான மூன்று கடற்கொள்ளையர்களை சோமாலிய அதிகாரிகளிடம் சீனா ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சீனா கடற்படையைச் சேர்ந்த கப்பலில் இருந்து மூன்று கடற்கொள்ளையர்களை சோமாலிய அதிகாரிகளிடம் சீனா ஒப்படைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஏப்ரலில் OS35 எனும் துவாலோ கொடியுடன் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை கொள்ளையடிக்க முயன்றதாக மூன்று கடற்கொள்ளையர்களை சீன கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர். இதன் மூலம் கொள்ளையர்களின் திருட்டு முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 2011 ஆம் …
Read More »வடகொரிய அதிபரை கொல்ல அமெரிக்கா-தென்கொரியா சதி
அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனைக்கு எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்கா தனது 2 போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. இதனால் கொரிய தீப கற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கை கொல்ல சதி …
Read More »இறுதி யுத்தத்தில் உயிரிழந்த முள்ளிவாய்க்கால் மக்களுக்கு வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல்
முல்லைத்தீவு-முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் நினைவு நாள், எதிர்வரும் 18ஆம் திகதி வட. மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக வட. மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். மேலும், முள்ளிவாய்க்கால் மண்ணில் மேற்கொள்ளப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்விற்கான ஒழுங்குகள் நடைபெற்றுவரும் அதேவேளை, இது குறித்து எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபை அமர்வின் பின்னர் விரிவாக கலந்துரையாடப்படுமெனவும் அவர் தெரிவித்தார். கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த ஆயிரக்கணக்கான …
Read More »25 மில்லியன் ரூபா செலவில் வெசாக் பண்டிகையை கொண்டாடிய மஹிந்தவின் மனைவி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான, முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, யுனெஸ்கோவின் ஏற்பாட்டில் பரிஸில் நடைபெற்ற வெசாக் பண்டிகையை பார்வையிடுவதற்கு 25 மில்லியன் ரூபா செலவிட்டதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு பரிஸ் சென்றபோது ஷிரந்தி ராஜபக்ஷ தங்கியிருந்த ஹோட்டலின் அறை ஒன்றுக்கான ஒரு நாள் வாடகை, 63 …
Read More »நான் கூறியதை போன்று செய்திருந்தால் மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது: பைசர் முஸ்தபா
தான் கூறிய விடயங்களை செயற்படுத்தியிருந்தால் பல உயிர்களை காவுகொண்ட மீதொட்டமுல்ல அனர்த்தம் அரங்கேறியிருக்காது என உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கண்டி கொஹகொட குப்பை மேடும் சரியும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அங்கு சென்றிருந்த வேளையிலே அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ”மீதொட்டமுல்லையை போன்று அனர்த்தம் ஒன்று கொஹகொட …
Read More »மஹிந்த ஆட்சியாளர்கள் போன்று சர்வதேசத்திடம் மண்டியிடும் கொள்கை நல்லாட்சியில் இல்லை: முஜிபுர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இருந்த ஆட்சியாளர்களை போன்று, சர்வதேசத்திடம் மண்டியிடும் கொள்கை நல்லாட்சியிடம் இல்லை என கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தூதரகங்களுக்கான சிறப்புரிமை குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று வடக்கு- தெற்கு …
Read More »வவுனியாவில் அதிக பணம் செலுத்தும் மின் பாவனையாளர்கள்
வவுனியாவில் மின்சார சபையின் ஊழியர்கள் சீரான முறையில் மின்பட்டியலை வழங்காமையினால் மின் பாவனையாளர்கள் அதிகளவு பணத்தினை மின்சார சபைக்கு செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மின் பாவனையாளர் கருத்து தெரிவிக்கையில், மின்சார பாவனைக்கான பட்டியலில் அளவீட்டு முறையில் பணம் அறவிடப்படுகின்றது. குறிப்பாக முதலாவது யூனிட்டில் இருந்து 156 ஆவது யூனிட் வரையான ஒவ்வொரு 39 யூனிட்டுக்கும் அறவீட்டு தொகை மாற்றம் அடைந்து செல்லும். இதன்போது 79 ஆவது யூனிட்டில் இருந்து …
Read More »தொழிற்சங்கப் போராட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்க அரசின் அதரடி நடவடிக்கை
தொழிற்சங்கப் போராட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்க அரசு விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக திறன் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் இருக்க விசேட குழுவொன்றை அமைக்க ஜனாதிபதியும், பிரதமருக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று சைட்டம் எதிர்ப்புப் போராட்டத்தில் நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்திய சேவைகளும், …
Read More »