Sunday , June 29 2025
Home / தமிழ்மாறன் (page 75)

தமிழ்மாறன்

ஆப்கானில் கூடுதலாக 3 ஆயிரம் அமெரிக்க வீரர்கள்: டிரம்ப் புது திட்டம்

தலிபான்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தானில் கூடுதலாக அமெரிக்க வீரர்கள் 3 ஆயிரம் பேரை இறக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. இந்த தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆப்கான் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. ஆப்கானிஸ்தான் அரசுக்கு உறுதுணையாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளைச் சேர்ந்த 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இருந்து …

Read More »

தமிழர்களை ஒடுக்க முயற்சிக்கும் அரசு

பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் தினத்தில் அரச நிகழ்வு ஒன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்யவுள்ளமை தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்க முடியும் என்பதை காட்டுவதாக அமைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை தமிழர் தாயகப் பகுதிகளில் வெசாக் கூடுகளை இராணுவத்தினர் அமைத்து வருகின்றமை சிங்கள மயமாக்கலின் ஒரு அங்கம் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார். வெசாக் …

Read More »

இந்தியாவும் இலங்கையும் கலாசாரத்தால் ஒன்றிணைந்துள்ளது: இராதா வெங்கட்ராமன்

இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்த கலை கலாசார அம்சங்களை கொண்டதாகக் காணப்படுகின்றதென கண்டி உதவி இந்தியத் தூதுவலராயத்தின் தூதுவர் இராதா வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 156 ஜனன தின நிகழ்வு கண்டி உதவி இந்தியத் தூதுவராயத்தின் பாரத கேந்திர நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வுக்கும் அறிவு மேம்பாட்டுக்கும் உந்து சக்தியாக மொழியே …

Read More »

வவுனியாவில் தீர்வின்றி தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 75ஆவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் முன்னெடுக்கப்படுகின்றது. அவசரகாலச் சட்டத்தினை இரத்துச் செய்யுமாறும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விபரங்கள் விரைவில் அரசாங்கத்தினால் வெளியிட வேண்டுமெனவும் கோரி வடக்கு கிழக்கின் ஐந்து மாவட்டங்களில் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து …

Read More »

தேர்தல்களுக்குத் தயாராகுங்கள் – ஐதேகவினருக்கு ரணில் அழைப்பு

எதிர்காலத் தேர்தல்களுக்குத் தயாராகும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். சிறிகோத்தாவில் ஐதேகவின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கூடுதல் பொறுப்புணர்வுடன் கூடிய கட்சியாக- இளைஞர்களின் பங்களிப்புடன் ஐதேகவை பரந்துபட்ட அளவில் நவீனமயப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் தமது தொகுதிகளில் அதிகளவு நேரத்தைச் செலவிட வேண்டும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து தொகுதிகளில் மேற்கொள்ளப்படக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கலந்துரையாட வேண்டும். எந்த தேர்தலுக்கு …

Read More »

இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைக் கோருகிறார் கம்மன்பில

இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைத் தருமாறு சிறிலங்கா குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார். கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்று சிறிலங்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்தவாரம் தீர்ப்பளித்திருந்தது. அதேவேளை, …

Read More »

மோடியின் பயணத்தில் பொருளாதார நோக்கங்கள் கிடையாது – இந்தியத் தூதுவர்

இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணம் எந்த பொருளாதார நோக்கங்களையும் கொண்டதாக இருக்காது என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதுகுறித்து தகவல் வெளியிட்ட இந்தியத் தூதுவர், “நாளை மறுநாள் மாலை கங்காராமய வெசாக் வலயத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து, இந்தியப் பிரதமர் திறந்து வைப்பார். …

Read More »

கீதா குமாரசிங்கவின் பதவி ரத்து – நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பதவி வெற்றிடமாகியுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க அறிவித்துள்ளார். மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அமைய கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளதால், கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று கடந்த மே 3ஆம் நாள் மேல்முறையீட்டு …

Read More »

மோடியின் பாதுகாப்புக்காக நான்கு உலங்குவானூர்திகள் கொழும்பு வருகை

மோடியின் பாதுகாப்புக்காக நான்கு உலங்குவானூர்திகள் கொழும்பு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நாளை மறுநாள் கொழும்பு வரவுள்ளார். இலங்கையில் தங்கியிருக்கும் போது, இந்தியப் பிரதமருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே கொழும்பு வரத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, இந்தியப்பிரதமரின் பாதுகாப்பு அணியில் உள்ள நான்கு எம்.ஐ-17 சிறப்பு உலங்கு வானூர்திகள் நேற்று புதுடெல்லியில் இருந்து கொழும்பு …

Read More »

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் வெற்றி

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், …

Read More »