Monday , June 23 2025
Home / தமிழ்மாறன் (page 73)

தமிழ்மாறன்

சீனாவில் நிலநடுக்கம்: 8 பேர் பலி – 20 பேர் காயம்

சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வடமேற்கு சீனாவில் ஜின்ஜியாங் தன்னாட்சி பிராந்தியம் உள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.58 மணிக்கு இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. டேக்ஸ்கோர்கான் கவுண்டியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. பூமி அதிர்ச்சியால் அங்கு இருந்த மக்கள் பீதியில் அங்கிருந்து ஓடினார்கள். மரங்களால் செய்யப்பட்ட …

Read More »

இறக்காமத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

அம்பாறை – இறக்காமம் மாயக்கல்லி மலையில் அதிகளவில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நேற்றைய பௌத்த பிக்குகள் சிலருக்கு வழிப்பாடுகளில் ஈடுபடும் அனுமதியை பொலிஸார் வழங்கியுள்ளனர். குறித்த பகுதிக்குள் எவரும் பிரவேசிக்க கூடாது என நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், வெசாக் தினத்தை முன்னிட்டு இறக்காமம் மாயக்கல்லி மலைக்கு பக்தர்கள் வழிப்பாட்டிற்காக சென்றுள்ளனர். இதற்கமைய மாயக்கல்லி மலைப் பகுதியில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாப்பு வழங்க 1000ற்கும் …

Read More »

கூட்டமைப்பு அரசாங்கத்திடம் பேரம் பேசவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த அபிவிருத்தியையும் மையப்படுத்தி ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் பேரம் பேசவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். தமிழ் மக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வனையும், இறுதி தீர்வினையும் பெறுவதற்கே போராடி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கல்முனை – பெரியநீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் விளையாட்டு போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே …

Read More »

மோடிக்கு பாதுகாப்பு வழங்க கறுப்புப் பூனைகள் கொழும்பு வந்தன

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்கும் கறுப்புப் பூனை கொமாண்டோக்கள் கொழும்பு வந்திருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக இன்று மாலை கொழும்பு வரவுள்ளார். நாளை பிற்பகல் வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான பணிகளில் சிறிலங்கா அரசாங்கம் 6000 காவல்துறையினரைப் பணியில் அமர்த்தியுள்ளது. எனினும், இந்தியப் பிரதமருக்கான …

Read More »

காலி கடற்படைத் தளத்தில் நெதர்லாந்தின் ஆயுதக்களஞ்சியம்

இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லும் தமது நாட்டுக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்குத் தேவையான ஆயுதங்களை, நெதர்லாந்து அரசாங்கம் காலி கடற்படைத் தளத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கவுள்ளது. சிறிலங்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது. சோமாலிய கடற்கொள்ளையர்களை எதிர்கொள்ளும் வகையில், தமது நாட்டுக் கொடியுடன் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்காவுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் நெதர்லாந்து கையெழுத்திடவுள்ளது. சிறிலங்காவின் காலி துறைமுகத்தில் …

Read More »

சிறிலங்கா வழியாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்ட மாத்திரைகள் இத்தாலியில் சிக்கின

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் இருந்து சிறிலங்கா வழியாக கப்பலில் அனுப்பப்பட்ட 37 மில்லியன் வலி நிவாரணி மாத்திரைகள் இத்தாலி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. Tramadol என்ற வலி நிவாரணியாகப் பயன்படுத்தும் 37 மில்லியன் மாத்திரைகள் இந்திய மருந்து நிறுவனம் ஒன்றினால், லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சிறிலங்காவில் இருந்தே இந்த மருந்துக் கொள்கலன்கள், கப்பல் மூலம் லிபியாவுக்கு அனுப்பப்பட்டது. லிபியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் தேவைக்காகவே இவை அனுப்பி வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இத்தாலியின் ஜினோவா …

Read More »

சிறிலங்காவில் அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் நரேந்திர மோடி

சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா தலைவர்களுடன் முறைப்படியான அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர் சஞ்சய் பாண்டா தெரிவித்துள்ளார். ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைவார். அங்கிருந்து வாகனம் மூலம் கங்காராமய விகாரைக்குச் சென்று, சிறிலங்கா பிரதமருடன் இணைந்து அலங்கார விளக்குகளை திறந்து …

Read More »

சு.கவின் அமைச்சரவை பேச்சாளராக தயாசிறியை நியமிக்க அனுமதி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக அமைச்சரவை பேச்சாளராக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவை நியமிக்க கட்சியின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோரின் அனுமதி கிடைக்கப்பட்டதன் பின்னர் தயாசிறி ஜயசேகரவின் பெயர் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழியப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கயந்த …

Read More »

சுதந்திரத்தை சொந்த மண்ணில் இழந்து வாழும் முள்ளிக்குளம் மக்கள்

முள்ளிக்குளம் மக்களின் 38 நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் அவர்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, மக்கள் முள்ளிக்குளம் கிராமத்திற்குச் சென்று 10 தினங்களை கடக்கின்ற போதும் அந்த மக்கள் தமது சொந்த காணிகளில் சுயமாக குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா தெரிவித்தார். முள்ளிக்குளம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- ”முள்ளிக்குளம் …

Read More »

மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்திய தூதரகம் முற்றுகை

பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், மீனவர் பிரச்சினை தொடர்பாக அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர் சங்கத்தினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களால் கடல் வளம் அழிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த மீனவர் சங்க பிரதிநிதிகள், அத்துமீறும் …

Read More »