Thursday , June 26 2025
Home / தமிழ்மாறன் (page 71)

தமிழ்மாறன்

சிவாஜிலிங்கத்தின் செயற்பாடு கவலையளிக்கின்றது: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் இணைந்து சிலர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதும், இராணுவத்தினரை விமர்சிப்பதும் கவலையளிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அரநாயக்க பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர், இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் நினைவாக முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். இவ்வாறு விளக்கேற்றி படையினரை அசௌகரியத்திற்கு உள்ளாக்க இடமளிக்கப்பட மாட்டாதென தெரிவித்த …

Read More »

யாழில் பொலிஸ் அதிகாரிகளுக்கிடையில் கைகலப்பு!

யாழ்ப்பாண நகரப்பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மதுபானம் அருந்துவதற்காகச் சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இரு பொலிஸ் அதிகாரிகளும் தற்செயலாக சந்தித்த போது பழைய விரோதம் காரணமாக அவர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன் பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. நிலைமை மோசமடைவதை அவதானித்த விருந்தினர் விடுதியின் முகாமையாளர் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதுடன், இது குறித்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் …

Read More »

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையால் 1400 உற்பத்திகளுக்கு சந்தைவாய்ப்பு!

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மூலம் 1400 உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பு கிடைக்கும் என சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பாரிய அளவில் வரிச்சலுகை கிடைப்பதால், இலங்கையின் உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் மலிவான விலைகளில் கிடைக்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மூலமாக இலங்கையின் ஆயிரத்து …

Read More »

கீதா குமாரசிங்க விவகாரம்: இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிப்பு

கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்யும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக கீதா குமாரசிங்க தாக்கல் செய்திருந்த மனு இன்று (திங்கட்கிழமை) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுவின் மீதான விசாரணை நிறைவடையும் வரை இடைக்கால தடையுத்தரவை உச்ச நீதிமன்றம் நீடித்துள்ளது. இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ள கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியாதென மேன்முறையீட்டு …

Read More »

வடமத்திய மாகாண முதலமைச்சரை நீக்கும் கோரிக்கை நிராகரிப்பு!

வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்னவை நீக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் கையெழுத்திட்ட மகஜரை மாகாண ஆளுநர் ஏற்க மறுத்துள்ளார். ஏற்கனவே முதலமைச்சராக இருந்த எஸ்.எம்.ரஞ்ஜித்திற்கு குறித்த பதவி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்து இன்று (திங்கட்கிழமை) இவ் உறுப்பினர்கள் மகஜரை கையளிக்க முற்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த மகஜரை ஏற்பதற்கு ஆளுநர் பி.பி.திசாநாயக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Read More »

அமைச்சரவைக் கூட்டங்களை நிறுத்தினார் சிறிலங்கா அதிபர் – அதிகார இழுபறியின் உச்சம்?

அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஐதேகவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இழுபறி நிலவி வந்தது. எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களின் போது, பிரதமர் நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் …

Read More »

சுமந்திரனுடன் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாகவே அமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் மற்றும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆகியோர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் கலந்துரையாடியுள்ளனர். இதனிடையே, அமெரிக்க பிரதிநிதிகள் சபை …

Read More »

இந்தியா உள்ளிட்ட சுமார் 100 நாடுகளை அச்சுறுத்திய சைபர் தாக்குதல்: மூல காரணம் என்ன?

இந்தியா உள்ளிட்ட சுமார் 100 நாடுகளின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை முடக்கிய சைபர் தாக்குதல்களினால், பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டன. தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்கு நமக்கு விரைவான சேவையை வழங்கி, நமது பணிச்சுமையை குறைக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்துகளும் அதிகரிக்கின்றன. சைபர் தாக்குதல்களால் தொழில்நுட்பங்கள் முடக்கப்படும்போது மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலக சமுதாயத்திற்கு இந்த சைபர் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில், நேற்று உலகம் முழுவதும் உள்ள பல்வேறு …

Read More »

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்களை மட்டுமல்லாது அப்பாவி மக்களையும் குறிவைத்து பாகிஸ்தான் துருப்புகள் தாக்குதல்கள் நடத்துகின்றன. இந்த மாத தொடக்கத்தின்போதுகூட காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த …

Read More »

ஹபீஸ் சயீத் அமைப்புக்கு எதிராக பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் அமைப்புக்கு எதிராக பொருளாதார தடை விதித்து அமெரிக்க அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த நிலையில், மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி நடந்த தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தாவா அமைப்பின் நிறுவனரான ஹபீஸ் சயீத்தின் நிறுவனம் மற்றும் பல தனிப்பட்ட நபர்கள் …

Read More »