ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவக வளாகத்தில் திடீரென ஹெலிகாப்டரை தரை இறக்கிய விமானியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ‘பசிவந்தால் பத்தும்பறந்து போகும்’ என்ற பழமொழி உண்டு. அதற்கு ஏற்ப ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. பசியால் வாடிய விமானி ஒருவர் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரை துரித உணவகம் முன்பு இறக்கி உணவு பொருட்களை வாங்கி சென்றார். இச்சம்பவம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள …
Read More »வட மத்திய மாகாணத்தின் அமைச்சராக சுசில் குணரத்ன நியமனம்
வட மத்திய மாகாணத்தின் போக்குவரத்து மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுசில் குணரத்ன வட மத்திய மாகாண ஆளுநர் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். முன்னர் அமைச்சராக இருந்த எஸ்.எம் ரஞ்சித் பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வட மத்திய மாகாண அமைச்சராக சுசில் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். வட மத்திய மாகாண சபையின் அமைச்சராகவிருந்த கே.எச். நந்தசேனவை அவரது அமைச்சுப் பதவியில் இருந்து முன்னறிவித்தல் இன்றி …
Read More »ஏவுகணை விவகாரம்: வடகொரியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம்
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் விதமாக சமீபத்தில் வடகொரியா நடத்தியுள்ள ஏவுகணை சோதனைக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை. இதனால் கொரிய தீப கற்பகத்தில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தென் கொரியாவில் அதிபர் தேர்தல் நடந்தது. புதிய …
Read More »கம்மன்பிலவுக்கு மூளையில் சுகமில்லை ; பைத்தியத்துக்கு இந்திய வைத்தியர் ஒருவரிடம்தான் வைத்தியம் பார்க்க வேண்டும் : மனோ கணேசன்
இந்திய பிரதமர் மோடி, மலையகம் சென்று, தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை அமைத்து தர உறுதியளித்துள்ளார். அதேபோல், இலங்கையில், இந்தியா ஏற்கனவே வழங்கிவரும் இலவச அம்புலன்ஸ் என்ற மருத்துவ வாகன வசதியை இன்னும் ஏழு மாகாணங்களுக்கு விஸ்தரிப்பது தொடர்பாகவும் அறிவித்துள்ளார். இவை பற்றிய பின்னணிகளை அறியாமல், புரிந்துக்கொள்ள முயற்சி செய்யாமல், இத்தகைய அறிவிப்புகளை செய்ய நரேந்திர மோடி யார்? இலங்கை இந்தியாவின் 30வது மாநிலமா? என்ற கேள்விகளை எழுப்பி, அதன்மூலம் …
Read More »சர்வதேசத்தின் தலையீட்டின் மூலமே உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம்: சி.வி.
சர்வதேச உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒருபோதும் உண்மையை வெளிக் கொண்டுவர உதவி செய்யாது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அத்தினத்தில் தமிழ் மக்கள் அனைவரும் 3 நிமிட …
Read More »வடக்கின் அபிவிருத்தி பணிகள் திருப்தியளித்துள்ளன என்கிறது அமெரிக்க காங்கிரஸ்
யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வட. மாகாணத்தில், புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் திருப்திகரமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க காங்கிரஸ் சபையின் பிரதிநிதி பில் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், வடக்கு மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து முன்னேற்றகரமான முறையில் செயற்படும் …
Read More »காலி மாவட்ட செயலகத்தின் இணையதளம் மீது சைபர் தாக்குதல்
காலி மாவட்ட செயலகத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதல் எப்போது மேற்கொள்ளப்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் சைபர் தாக்குதல் குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவே காலி மாவட்ட செயலகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத், இஸ்லாம் மதத்திற்கு ஜிந்தாபாத், முஸ்லிம்களுக்கு ஜிந்தாபாத், பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஜிந்தாபாத் மற்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. குழுவிற்கு ஜிந்தாபாத் என அந்த இணையத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. …
Read More »இலங்கையில் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அமுல்
இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அமுல்படுத்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரும், பிரதிநிதிகளின் தலைவருமான துங் லாய் மார்க் இதனை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த சட்டங்களை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள நிலையில், இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான இறுதிகட்ட பணிகள் …
Read More »இந்தியா தெற்கிற்கு வழங்கினால் சகோதரத்துவம் மலையக தமிழர்களுக்கு வழங்கினால் இனவாதமா?
இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கின்ற பொழுது அதனை ஒரு சிலர் இனவாத கண் கொண்டு பார்க்கின்றார்கள்.ஆனால் இந்தியாவில் இருந்து வைத்தியர்கள் இங்கு வருகின்ற பொழுது அவர்களிடம் வைத்திய சேவையை பெற்றுக் கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.எத்தனையோ இந்திய வைத்தியர்கள் இன்று இலங்கையில் பல சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பல உயிர்களை பாதுகாக்கின்றார்கள்.ஆனால் மலையக பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து அழைப்பதை ஒரு …
Read More »சிறிலங்காவின் தனிநபர் வருமானம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் வீழ்ச்சி
சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம், 15 ஆண்டுகளுக்குப் பின்னர், வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கிய வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், கடந்த ஆண்டு சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் 8 டொலரினால் (0.21 வீதம்) வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு தனிநபர் வருமானம் 3835 டொலர் என்று சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடைசியாக …
Read More »