வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்து தமழரசுக் கட்சியை புறக்கணித்து வருகின்ற நிலையில், முதல்வருக்கு எதிரான மாகாண சபை உறுப்பினர்களின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக மாகாண சபை உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு ஆளுநரிடம் கடிதமொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வடக்கு மாகாண சபையில் நீடித்துவரும் குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே …
Read More »பெரும்பான்மையை நிரூபிக்குமாறு சி.வி.க்கு அறிவுறுத்தல்
வடக்கு மாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவுறுத்தல் விடுத்துள்ளார். வடக்கு முதல்வருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஆளுநரிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரிடம் வடக்கு ஆளுநர் இவ் அறிவுறுத்தலை முன்வைத்துள்ளார். வடக்கின் அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள …
Read More »ஞானசாரருக்கு பிடியாணை!
பொது பல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இன முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவரை ஆஜராகுமாறு நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட அறிவித்தலை ஞானசாரர் தொடர்ந்தும் உதாசீனப்படுத்தி வந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக இன ரீதியான முரண்பாடுகளை …
Read More »லண்டன் தீ விபத்திற்கு இலங்கை அரசாங்கம் இரங்கல்!
மேற்கு லண்டனில் தொடர்மாடிக் கட்டட தீ விபத்தினால் ஏற்பட்ட பேரழிவிற்கு வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கை அரசின் சார்பில் இரங்கல் வெளியிட்டுள்ளார். 27 மாடி குடியிருப்பு கட்டடத்தில் நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தானது பேரதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்த அவர், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் அன்பான உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்தார். அதேவேளை, காயங்களுக்கு உள்ளானவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மேற்படி …
Read More »முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான 16 மாகாணசபை உறுப்பினர்கள் வட மாகாண ஆளுனரை நேற்றிரவு சந்தித்தனர். அமைச்சர்கள் குருகுலராசா, டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோரும் ஆளுனரைச் சந்தித்திருந்தனர். எனினும், அமைச்சர் ஐங்கரநேசன் இதில் பங்கேற்கவில்லை. இதன்போதே, வடக்கு மாகாண முதலமைச்சர் மீதான நம்பிக்கை அற்று விட்டதாக கூறியும் அவரை மாற்றக் கோரியும், வடக்கு …
Read More »பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் அதிபர் மேக்ரான் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு
பிரான்ஸ் அதிபர் தேர்தலை தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலிலும் அதிபர் மேக்ரான் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக முதல் சுற்று முடிவில் தெரியவந்துள்ளது. பிரான்சில் கடந்த மாதம் 7-ந் தேதி நடந்த அதிபர் தேர்தலில் என் மார்ச்சே(குடியரசை நோக்கி நகர்வு) என்ற கட்சியின் தலைவரான மேக்ரான் அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில் 577 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் முதல் சுற்று தேர்தல் நடந்தது. மொத்தம் 49 …
Read More »நாவன்லி கைது எதிரொலி: ரஷ்யா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1500 பேர் கைது
நாவன்லி கைது எதிரொலியால், அவருக்கு ஆதரவு தெரிவித்து, ரஷ்யா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும், மூத்த அரசியல்வாதியான அலெக்சி நாவன்லி கடந்த 30 நாட்களாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் அரசின் ஊழலுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். மார்ச் மாதத்திற்கு பிறகு பெரிய அளவில் நடத்தப்பட்ட போராட்டம் இது என்பது …
Read More »வளைகுடா நாடுகளில் நிலவும் குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம் – ஈரான் குற்றச்சாட்டு
கத்தார் மீதான தடை உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நிலவும் சமீபத்திய குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் உச்ச தலைவர் அயடோலா அலி கமேனெய் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் உடன் இருந்த தூதரக உறவுகளை சவூதி, பக்ரைன், எகிப்து உள்ளிட்ட 7 நாடுகள் திடீரென முறித்தன. பயங்கரவாதத்திற்கு கத்தார் துணை போவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ஈரான் மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளும் …
Read More »ரம்ஜான் மாதத்தில் உலகம் முழுவதும் ஆவேச தாக்குதல் நடத்துவோம் – ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு காலத்தில் மேற்கத்திய நாடுகள், மத்தியகிழக்கு வளைகுடா நாடுகள், ரஷ்யா மற்றும் ஆசியாவிலுள்ள அனைத்து நாடுகளிலும் அதிரடி தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி மக்களை கொடுமைப்படுத்தி அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகம் முழுவதும் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஒரே இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் போவதாக சபதம் ஏற்றுள்ளனர். …
Read More »தேர்தல் குளறுபடிகளுக்காக உள்கட்சி எம்.பி.க்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்கு பொறுப்பேற்று அக்கட்சி எம்.பி.க்களிடம் பிரதமர் தெரசா மே மன்னிப்பு கேட்டுள்ளார். பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில், மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது. ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால், வடக்கு …
Read More »