வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மொறட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை அல்ல எனவும் இதற்கு தீர்வு காண்பது என்பது சிறிய விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அத்தோடு, …
Read More »டெங்கு நோய்க்கான இரத்தப் பரிசோதனைக் கட்டணங்கள் குறைப்பு!
டெங்கு நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் இரண்டு இரத்தப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். டெங்குநோய் ஒழிப்புத் தொடர்பாக நேற்றையதினம் (சனிக்கிழமை) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் இலகுவான முறைகளில் தமது இரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டணக் …
Read More »மஹிந்த பாகிஸ்தான் விஜயம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு நாளை விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பு உரையாற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் 2017 தேசிய பாதுகாப்பு மற்றும் யுத்தம் தொடர்பிலான மாநாட்டில் இவர் உரையாற்றவுள்ளார். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்கான பல்கலைக்கழகத்தின் தலைவரான லெப்டினன் ஜெனரல் ரிஸ்வான் அக்தாரினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Read More »புலம்பெயர் அமைப்புகளின் திருப்திக்காக என் மீது விசாரணை: கோட்டா
புலம்பெயர் அமைப்புகளை திருப்திப்படுத்தவா அல்லது ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா தம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர் என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச, தெரிவித்துள்ளார். அர்த்தமில்லாத விசாரணைகளில் தன்னை தொடர்புபடுத்தி விட்டு தன்னை தொல்லை செய்ய வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைக்காக முன்னிலையாகியதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Read More »கொழும்பில் டெங்கு நோய் தொற்று அதிகரிப்பு
கொழும்பின் பல்வேறு இடங்களில் டெங்கு நோய், வைரஸ் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவல் அதிகரித்துள்ளதால் மக்களை அவதாதனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. பாரிய வறட்சிக்கு பின்னர் கடுமையான மழை பொழிந்ததால் குப்பை கூலங்களில் கழிவு அகற்றப்படாமை, கால்வாய்களில் அசுத்தமான நீர் பெருக்கம் மற்றும் சூழல் சுத்தமின்மையால் இவ்வாறு நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக மத்திய கொழும்பின் பல்வேறு இடங்களில் நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு …
Read More »சீனாவில் மழலையர் பள்ளியில் குண்டுவெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு
சீனாவில் மழலையர் பள்ளியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 59 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜுஜோ பகுதியில் பிரபலமான நர்சரி பள்ளியில் இருந்து இன்று மாலை குழந்தைகளை பெற்றோர் அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது பள்ளியின் பிரதான வாயில் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதனால், குழந்தைகளும் பெற்றோரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். பலரது உடல் உறுப்புகள் …
Read More »கியூப ராணுவத்திற்கு அமெரிக்காவின் நிதியுதவியை நிறுத்தும் திட்டம்: டிரம்ப் இன்று அறிவிக்கிறார்
கியூப ராணுவத்திற்கான அமெரிக்கா வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்தும் திட்டம் அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் …
Read More »செர்பியாவில் ஓரினச் சேர்க்கை பெண் பிரதமர்: அதிபர் நியமனம் செய்தார்
செர்பியாவில் புதிய பிரதமராக ஓரினச் சேர்க்கையாளர் அனா பிரபிக் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார். இவரை அதிபர் அலெக்சாண்டர் வுசிக் நியமனம் செய்தார். செர்பியா நாட்டின் புதிய அதிபராக அலெக்சாண்டர் வுசிக் சமீபத்தில் பதவி ஏற்றார். அதை தொடர்ந்து புதிய பிரதமர் தேர்வு நடைபெற்றது. அதில் பலரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் புதிய பிரதமராக அனா பிரபிக் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார். இவரை அதிபர் அலெக்சாண்டர் வுசிக் நியமனம் …
Read More »வவுனியாவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகச் சுவரொட்டிகள்!
வவுனியா மாவட்டத்தின் நகரின் சில பிரதேசங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வன்னி மக்கள் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி, அரசுக்கூட்டுச்சதியை முறியடிப்போம்’ எனும் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதலமைச்சருக்கு எதிராக தமிழரசுக்கட்சியினாலும், சில வடக்கு மாகாணசபை உறுப்பினர்களாலும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை எதிர்த்து, முதலமைச்சருக்கு ஆதரவாகத் தொடர்ச்சியாகப் பல இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. …
Read More »கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு காலதாமதமின்றி கூட்டப்பட வேண்டும்: ரெலோ வலியுறுத்தல்
வட. மாகாண சபையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு சுமூகமான தீர்வை எட்டும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் காலதாமதமின்றி உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறிகாந்தா வலியுறுத்தியுள்ளார். வட. மாகாண சபையில் எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்தாலோசிக்கும் வகையில் ரெலோ அமைப்பு நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுத்த ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் …
Read More »