Wednesday , June 25 2025
Home / தமிழ்மாறன் (page 58)

தமிழ்மாறன்

வடக்கு அமைச்சர்கள் விவகாரம் மீள் பரிசீலனை

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவரை தொடர்ந்து பணியில் அமர்த்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக, தான் நடவடிக்கை எடுப்பதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ். ஆயருடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபையில் வெடித்துள்ள பிரச்சினையை சமரசமாக தீர்க்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ள சமய தலைவர்கள், இன்று (திங்கட்கிழமை) காலை வடக்கு …

Read More »

கீதாவின் மனுவை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட நீதவான் குழு நியமனம்

கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை எதிர்த்து அவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரிக்க ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி , பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலைமையில் இந்த நீதவான் குழு குறித்து மனுவை விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர். குறித்த மேன்முறையீட்டு மனுவின் பிரதிவாதிகள் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த ஐவரடங்கிய நீதவான் குழு பிரதம …

Read More »

புகையிரத ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு

புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். பணிக்கு இணைத்தல், பதவி உயர்வு மற்றும் ஊதிய கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அரசு உரிய தீர்வு வழங்காமையை கண்டித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். இவர்களின் கோரிக்கை குறித்து அண்மையில் பேச்சுகள் இடம்பெற்றதாக கூறப்பட்டாலும் அரசு உறுதிமொழி எதனையும் வழங்கியிராத சூழலிலேயே நாளை போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Read More »

சிரியா வான்வெளித் தாக்குதல்: 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியானதாக ரஷ்யா தகவல்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டெயிர் எஸ்ஸார் மீது சிரியா ராணுவம் நடத்திய வான்வெளித் தாக்குதலில் 180 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க ரஷ்யாவுடன் இணைந்து சிரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்த மாதம் நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் சுமார் 180 ஐ.எஸ் தீவிரவாதகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் …

Read More »

ஜப்பான்: அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதியதில் மாயமான கடற்படை வீரர்கள் உயிரிழப்பு

ஜப்பான் கடலில் சரக்கு கப்பலுடன் அமெரிக்க போர்க் கப்பல் மோதிய விபத்தில் மாயமான கடற்படை வீரர்களின் உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்காவின் பிட்ஸ் ஜெரால்டு என்ற நாசகாரி போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. அது மிகவும் அதி நவீன தொழில் நுட்ப வசதி கொண்டது. இதில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன. இது யோகோசுகா பகுதியில் தென் மேற்கில் 56 …

Read More »

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் அதிபர் இமானுவேல் மெக்ரான் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது. பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு நடந்தது. சமீபத்தில் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று அதிபரானார். அவர் செஞ்சுறிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சியை தொடங்கி ஓராண்டுக்குள் ஆட்சியை பிடித்தார். அதிபர் தேர்தல் முடிந்ததையொட்டி …

Read More »

ஞானசார தேரர் குறித்து தகவல் தாருங்கள்: பொலிஸார் வேண்டுகோள்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மறைந்திருப்பதற்கு உதவிபுரிபவர்கள் குறித்துத் தகவல் வழங்கினால் அவரைக் கைது செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “குறித்த தேரருக்கு பாதுகாப்பு வழங்குவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் எந்தவித தராதரமும் …

Read More »

கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்படவில்லை: மல்கம் ரஞ்சித் ஆண்டகை

கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க ஆலயங்கள் மீது அண்மைக்காலமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையுமில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நாட்டில் இனவாதிகளினால் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக பல்வேறுபட்ட தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து நேற்றைய தினம் (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒவ்வொரு தரப்பினரையும் தாக்குவதற்கும், தாழ்வாக கவனிப்பதற்கும் மதங்களை கைப்பொம்மையாக …

Read More »

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா புதிய வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்த ராஜாவின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு-வந்தாறுமூலை வளாக, நல்லையா மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆரம்பமானதுடன், முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய நேர அட்டவணைப்படி நான்கு அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு இடம்பெறுகின்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, வந்தாறுமூலை மற்றும் திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பை …

Read More »

வடக்கு விவகாரத்தில் நிதானம் முக்கியம்: யாழ். ஆயர்

வடக்கு அமைச்சர்கள் விவகாரம் எந்த தரப்பினரையும் பாதிக்காத வகையில், நிதானமாகவும் சமாதானத்துடனும் முன்னெடுக்கப்பட வேண்டுமென யாழ். ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அமைச்சர் எஸ்.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி உள்ளிட்ட குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். ஆயரை சந்தித்து வடக்கு மாகாண அமைச்சர்கள் தொடர்பான பிரச்சினைகளை …

Read More »