Wednesday , February 5 2025
Home / அருள் (page 309)

அருள்

டிடிவி தினகரன் உருவபொம்மை எரிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்ததைக் கண்டித்து, அவரது உருவபொம்மை சேலத்தில் எரிக்கப்பட்டது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் இன்று காலை நீக்கினார். அதனை கண்டிக்கும் விதமாக 100-க்கும் அதிகமானோர் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கூடி தினகரனுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து தினகரன் உருவபொம்மையை தீயிட்டு எரிந்தனர். மேலும் சேலம் மாவட்டம் ‌அயோத்திபட்டினம் உள்ளிட்ட …

Read More »

கமலோடு இணைந்து மீண்டும் வாழ்க்கை

நடிகர் கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்த கவுதமி, சில மாதங்களுக்கு முன் அவரிடமிருந்து பிரிந்து தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் கமலோடு கவுதமி இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாகவும், அவருடன் நெருக்கம் காட்டுவதால், மீண்டும் கமலும், கௌதமியும் இணைய இருப்பதாகவும் வீடியோ செய்தி ஒன்று வெளிவந்தது. அந்த வீடியோவை வெளியிட்டு அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள்ள கவுதமி ‘முட்டாள்கள் அர்த்தமற்று பேசுகிறார்கள். நாய்கள் குரைக்கும். நான் …

Read More »

ஆறுக்குட்டி மந்தை தாவும் ஆட்டுக்குட்டி

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “ஆறுக்குட்டி போன்ற மந்தை தாவுகிற ஆட்டுக்குட்டிகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. அது ஏற்கனவே ஓபிஎஸ் மந்தையிலிருந்து ஈபிஎஸ் மந்தைக்கு வந்த ஆட்டுக்குட்டி. அந்த ஆட்டுக்குட்டி இன்னொரு மந்தைக்குப் போவதற்கு கணக்கு பார்க்கிறது. எனவே ஆறுக்குட்டியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறினார். அடுத்து பேசிய புகழேந்தி, “ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவருடைய தொகுதிக்கு வந்த அப்போதைய அமைச்சர் கே.பி.முனுசாமியை சந்திக்க மறுத்து தகராறு …

Read More »

கேரளாவில் உயிரிழந்த தமிழக இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி

கேரளா மாநிலம் கொல்லத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 லட்சம் ரூபாய் வழங்கினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சியில் திட்ட மேலாண்மை அலகு அலுவலகத்திற்காக 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தையும் முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கேரளா மாநிலம் கொல்லத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 லட்சம் …

Read More »

எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி வழக்கு

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குப் தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். முதல்வருக்கான …

Read More »

ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார். தலைமைச் செயலகத்தில் நடந்த சந்திப்பின்போது, அரசியல் குறித்துப் பேசவில்லை என்று ஹெச்.ராஜா தெரிவித்தார். டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதால், ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “முதலமைச்சரையும், புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் …

Read More »

அ.தி.மு.க.வில் எந்த அணியிலும் இல்லை

அதிமுகவில், எடப்பாடி பழனிசாமி இருந்தவர், அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த பி.கே. வைரமுத்துவை பதவியில் இருந்து டி.டி.வி.தினகரன் நேற்று விடுவித்து அறிவிப்பு வெளியிட்டார். அவருக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவி, மணல்மேல்குடி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதியின் சகோதரர். இந் நிலையில் எடப்பாடி அணிக்கு ஆதரவு அளித்த …

Read More »

சின்னம்மா சொல்லுறவுங்களுக்குதான் என் ஓட்டு

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆளும் அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் நடிகர் கருணாஸ், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து தினகரனிடம் எதுவும் பேசவில்லை. அவர் சிறையிலிருந்து வந்த பிறகு நான் …

Read More »

உரிய நேரத்தில் முடிவெடுப்போம்

தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், தமிழக ஆட்சி நிர்வாகத்தில் மத்திய அரசு செய்து வரும் வரம்பு மீறிய தலையீடுகள், தமிழகத்தில் நிலவும் குழப்பத்துக்குக் காரணம் என அறிவதாகக் கூறியுள்ளனர். தற்போது உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடிகளை தமிழக கொங்கு இளைஞர் பேரவை, மனித நேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகியவை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தமிழகத்தின் நலன் கருதி தங்களது அரசியல் …

Read More »

டிடிவி தினகரன் அணியில் 40 எம்.எல்.ஏ.க்கள்

சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் தலைமையில் விரைவில் புதிய அரசு அமையும் என்று, அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கூட்டியிருக்கிறது. கடந்த 18 ஆம் தேதி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த திவாகரன், 26 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறியிருந்தார். தற்போது, கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரனுக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமியின் மைனாரிட்டி …

Read More »