Saturday , April 20 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வீதிவீதியாக தீவிர பிரச்சாரம்

ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வீதிவீதியாக தீவிர பிரச்சாரம்

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தன்னுடைய வெற்றி இருக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி.தினகரன் மூன்றாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஏராளமான பொதுமக்கள் திரண்டு, அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பளித்தனர்.

இதனையடுத்து வீதி வீதியாக தனது ஆதரவாளர்களுடன் சென்ற தினகரன், பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே நகர் மக்களை ஆச்சரியப்படுத்தும் அளவில் நாளை பிரத்யேக தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளதாக தெரிவித்தார். கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தன்னுடைய வெற்றி இருக்கும் என்றும் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மாலை பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட காசிமேடு ஐஸ் பேக்டரி பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கும் ஓ. பன்னீர்செல்வம், தொகுதியின் பல்வேறு இடங்களிலும் வாக்குசேகரிப்பில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …