இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி அந்த மண்டபத்தை விசேட அதிரடி படையினர் பரிசோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நகரசபை வாயில் மற்றும் நகரசபை மண்டபத்தில் பாதுகாப்பு அதிரடி படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பெருமளவில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.