Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை

சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை

குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சங்ரிலா விருந்தகத்தில் குண்டு தாக்குதலை நடத்திய இருவரில் ஒருவர் சஹ்ரான் ஹஷீம் என மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனைக்காக அவரின் மகள் மற்றும் சகோதரியின் இரத்த மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினால் அண்மையில் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …