காணியிலிருந்து இராணுவம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும்
புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது.
19 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள், வீடுகள் மற்றும் பொருளாதார நிலையங்கள் என்பவற்றை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 8 வருடங்களாக வாடகை வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேப்பாபுலவு மக்களிற்கு ஆதரவு தெரிவித்தும், தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் கடந்த 4 ஆம் திகதியிலிருந்து போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
நேற்றைய தினம் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேற்றையதினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியிருந்ததுடன் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை இராணுவத்தின் தேவைக்கு பெற்றுக்கொண்டு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். எனினும் மக்கள் தமது காணிகள் விடுவிக்கப்படும் போராட்டம் தொடரும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.