மஹிந்தவுடன் இணைந்து கருணாவும் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறார் – பிரசன்னா இந்திரகுமார்
தமிழ்த் தேசியத்திற்காக போராடிய முன்னாள் பிரதியமைச்சர் கருணாஅம்மான் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முகவராக செயற்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்த துரோகத்தையே, கருணா அம்மானும் தமிழ் மக்களுக்கு செய்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், அரச ஆடு மரபுரிமை வள மேம்பாட்டு நிலையம் தும்பங்கேணியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு தலைமையுரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கடந்தகால மற்றும் தற்போதய செயற்பாடுகள் தொடர்பாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.