Saturday , April 20 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தபால் சேவை ஊழியர்கள்

அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தபால் சேவை ஊழியர்கள்

தபால் சேவை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு வழங்க தவறினால் எதிர்வரும் 22ம் திகதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக தபால் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக தபால் மா அதிபருடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் எச்.கே. காரியவசம் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் திகதியில் இருந்து 22ம் திகதி வரை தொடர்ச்சியான வேலை நிறுத்தம் செய்திருந்ததாகவும், அதன்போது தீர்வு வழங்கப்பட்ட போதிலும் , எனினும் அது இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வருடத்தை கடந்துள்ள போதிலும் சம்பள ஆணைக்குழுவால் சரியான அறிக்கை இதுவரை முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில் எதிர்வரும் 15ம் திகதி தபால் மா அதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாகவும், அதன்போதும் தமக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 22ம் திகதி சுகயீன விடுமுறை செய்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாகவும் எச்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv