Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இரு முக்கிய பகுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் ?

இரு முக்கிய பகுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் ?

இரு முக்கிய பகுதிகளை சுற்றிவளைத்த பொலிஸார் ?

கல்கிஸ்ஸ மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை – கந்தவல பகுதியில் நேற்று மாலை கல்கிஸ்ஸ ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொட்டாஞ்சேனை பகுதியில் மேல் மாகாண ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 10 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு -12 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …