புதிய கூட்டணியை அமைப்பது குறித்த பேச்சவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து நியமிக்கப்பட்டுள்ள குழு, பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு நீதிமன்றத்தைப் பயன்படுத்துவது தவறானது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.