Friday , April 19 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மகிந்தவே மீண்டும் பிரதமர்! – மஹிந்தானந்த அளுத்கமகே

மகிந்தவே மீண்டும் பிரதமர்! – மஹிந்தானந்த அளுத்கமகே

மகிந்தவே மீண்டும் பிரதமர்! – மஹிந்தானந்த அளுத்கமகே

பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து அரசாங்கம் அமைப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்திருப்பது பகல் கனவாகும் என , மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மஹிந்த ராஜபக்ஷ்வையே மீண்டும் பிரதமராக்குவோம் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வின் கொள்கைப்பிரகடனத்தை அர்ஜுன் அலோசியஸுக்கு சொந்தமான அச்சகத்தில் அச்சிட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அலோசியஸுக்கு எதிரகாக இருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கின்றார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் அலேசியயஸின் அச்சகத்தில் அச்சிடப்பட்டதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை என்றும் முடிந்தால் அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv