கிளிநொச்சியில் கண்ணிவெடி மீட்பு
கிளிநொச்சி வட்டக்கச்சியிலுள்ள கிராம அலுவலா் காணியிலிருந்து மிதி வெடி ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சி சில்வா வீதியில் அமைந்துள்ள கிராம அலுவலகரின் காணியில் துப்பரவு செய்யும் பணியின் போதே காணியில் மிதி வெடி காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து இராமநாதபுரம் பொலிஸாருக்கு அறிவிக்கபட்டு அவா்களால் மீட்கப்பட்டு இன்று திங்கள் கிழமை விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச்செய்யடவுள்ளது.