இலங்கை அரசுக்கு கால அவகாசம்: இந்தியா ஆதரவு! – சுஷ்மா தெரிவிப்பு
2015இல் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதனை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் டுவிட்டரில் சுஷ்மா சுவராஜிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர், இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவேண்டும் என்பதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.