Friday , March 29 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மைத்ரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ள ஹிருணிகா!

மைத்ரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ள ஹிருணிகா!

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தனக்கு தெரிந்த விடயங்களை வெளிப்படுத்துமாறு ஹிருணிகா பிரேமச்சந்திர ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அழைப்பு விடுக்கப்பட்டால் தெரிவுக்குழுவில் தாம் முன்னிலையாகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியும் தனக்கு தெரிந்த விடயங்களை தெரிவுக்குழு முன்னிலையில் வெளிப்படுத்துமாறு ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார்.

தெரிவுக்குழு முன்னிலையில் தாக்குதலைப் பற்றி தனக்கு என்ன தெரியும் என்றும் , பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு கையாள்வது என்பதை பற்றியும் விளக்குமாறு ஜனாதிபதியிடம் ஹிருணிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஹிருணிகா இதனை தெரிவித்துள்ளார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv