Wednesday , March 27 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்

பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்

பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் – ஞானசாரர்

இந்த நாட்டை மீட்டெடுப்பதற்குப் பொருத்தமான தேசியத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று நுகேகொடயில் இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

யாருடையவாவது குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்டவோ, அல்லது பரம்பரை ரீதியாக ஆட்சிக்கு வருவதற்கோ ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவுசெய்ய பொதுபல சேனா வாக்களிக்க மாட்டாது எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ப ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டுமே தவிர , யாரிடமும் சோரம் போய் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் நிலைமையை மாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நாம் மிகவும் சிறந்த வேட்பாளரைத் தெரிவு செய்து அவரிடம் கட்சியையும், சின்னத்தையும் விட்டுவிட்டு வாருங்கள் என கூறவுள்ளதாகவும் கலகொடஅத்தே ஞானசார தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …