பிரான்சில் 191 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு
சுகாதார பணிப்பாளர் நாயகம் le Pr Jérôme Salomon அவர் திங்கள் மாலை தெரிவித்துள்ளதாவது இதுவரை கொரோனா வைரஸ்சால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாகவும் மற்றும் கொரோனா வைரஸ்சால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் 61 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனாவில் இருந்து பாதுகாக்க அவர் கூறியவை: “நாங்கள் தொற்றுநோயின் 2 ஆம் கட்டத்தில் இருக்கிறோம், வைரஸ் பரவுவதை நிறுத்த நாம் அனைவரும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து திரும்பினால் நீங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும். முகமூடிகள் நோயுற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொள்வோம் ” என அவர் தெரிவித்தார்.