Saturday , April 13 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல்

வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல்

வவுனியாவில் இ.போ.ச சாரதி மீது தாக்குதல்

வவுனியாவில் இன்று மாலை 3.30 மணியளவில் இ.போ.ச. சாரதி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா இ.போ.ச. சாலையில் சாரதியாக கடமையாற்றும் திருமணி திருச்செல்வம் (வயது 43) இன்று பணிக்கு லீவு போட்டுவிட்டு மாலை 3.30 மணியளவில் வவுனியா இலுப்பபையடி பேருந்து தரிப்பிடத்திலிருந்து சுந்தரபுரம் செல்லும் பேருந்தில் ஏறி காத்திருந்துள்ளார்.

இதன் போது ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவினர் பேருந்துக்குள் ஏறி குறித்த இ.போ. ச சாரதியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த சாரதி உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் தொடர்பில் இது வரை பொலிசார் யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …