Saturday , April 20 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்

நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்

நியமனம் நிறுத்தப்பட்டதை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்

கடந்த வாரம் வழங்கப்பட்ட கருத்திட்ட உதவியாளர் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கபப்ட்டுள்ளது.

குறித்த போராட்டத்தினை நியமனம் பெறவுள்ள உத்தியோகஸ்தர்கள் முன்னெடுத்திருந்தனர்.

கடந்த 16 ஆம் திகதி மக்கு தனிப்பட்ட நியமன கடிதங்கள் கிடைக்கப் பெற்று மாவட்ட செயலகத்தில் மூன்று நாட்கள் ஒப்பமிட்ட போதும் தங்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட நியமங்களை நேற்று தேர்தல் ஆணையாளரினால் தற்காலிகாமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தலுக்காக குறித்த நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் குறித்த நியமனம் தேர்தல் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் என அமைச்சின் செயலாளர் அல்லது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கோ அல்லது மாவட்ட செயலகத்துக்கோ எழுத்து மூலமாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நியமனத்திற்காக தாங்கள் இரண்டு முறை நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட பின்னரே தங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கான நியமனம் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்படவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே தேர்தல் முடிந்த பின்னர் மீள குறித்த நியமனம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட பின்னரே நாங்கள் எமது கோரிக்கையை நிறைவு செய்வோம் எனவும் பாதிகப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய 92 பேரின் நியமனமனம் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv