வங்காளதேசத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் பலி – 20 பேர் காயம்
வங்காளதேசத்தில் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர்.
வங்காளதேசத்தில் பரித்பூர் மாவட்ட நெடுஞ்சாலையில் ஒரு பஸ்சும், வேனும் சென்று கொண்டிருந்தது. டாக்கா- குல்னா நகரம் இடையே சென்று கொண்டிருந்த போது அவை இரண்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
அதில் வேனில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதனால் வேனும்,. பஸ்சும் தீப்பிடித்து எரிந்தன. அதில் 13 பேர் உடல் கருகி பரிதாகமாக இறந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பெரும் பாலானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.