தந்தையை அடித்து கொன்று உடலை வீட்டிலேயே புதைத்த 16 வயது மகன்!
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் கன்னட் தாலுகாவில் பகுதியில் காணாமல் போயிருந்த 50 வயது தந்தையை 16 வயது மகன் கொலை செய்து புதைத்த அதிர்ச்சி சம்பவம் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நாம்தேவ் சவான்(வயது50) என்பவர் கடந்த டிசம்பர் மாதம் திடீரென காணாமல் போய்விட்டார்.
கடந்த 2 மாதத்துக்கு மேலாக அவரை பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில், நாம்தேவ் சவான் கொலை செய்யப்பட்டு உடல் அவரது வீட்டுக்குள்ளேயே புதைத்து வைக்கப்பட்டு உள்ளதாக நேற்றுமுன்தினம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
உடனே போலீசார் அவரது வீட்டுக்குச் சென்று தோண்டி பார்த்தனர். அப்போது, வீட்டில் ஒரு இடத்தில் 2½ அடி ஆழத்தில் நாம்தேவ் சவானின் உடல் புதைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில், நாம்தேவ் சவானை அவரது 16 வயது மகன் அடித்து கொன்று உடலை புதைத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
போலீசார் தந்தையை கொன்று புதைத்த 16 வயது சிறுவனை போலீஸ் நிலையத்துக்கு பிடித்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
மிகப்பெரிய கொள்ளை கும்பல் யாழ்ப்பாணத்தில் சிக்கியுள்ளது
-
ஐ.தே.க. யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம்
-
பிரான்ஸ் Montreuil நகரத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதி
-
24 மணிநேரத்தில் 500 பேருக்கு இத்தாலியில் கொரோனா தொற்று – அண்மைய செய்தி
-
பிரான்சில் 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மேலும் அதிகரிக்கும் அபாயம்!
-
கொரோனாவால் சீன பொருட்களின் இறக்குமதி முடங்கியது…!
-
தென்கொரிய பயணிகள் இலங்கை வருகை சடுதியாக அதிகரிப்பு
-
ப்ளொரிடாவில் 6 வயது சிறுமியை கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற பொலிஸ் – அதிர்ச்சி சம்பவம்
-
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்
-
கொரோனா தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் வெளியிடுள்ள அவசர அறிக்கை
-
இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்!