Thursday , March 28 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / தந்தையை அடித்து கொன்று உடலை வீட்டிலேயே புதைத்த 16 வயது மகன்!

தந்தையை அடித்து கொன்று உடலை வீட்டிலேயே புதைத்த 16 வயது மகன்!

தந்தையை அடித்து கொன்று உடலை வீட்டிலேயே புதைத்த 16 வயது மகன்!

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் கன்னட் தாலுகாவில் பகுதியில் காணாமல் போயிருந்த 50 வயது தந்தையை 16 வயது மகன் கொலை செய்து புதைத்த அதிர்ச்சி சம்பவம் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

நாம்தேவ் சவான்(வயது50) என்பவர் கடந்த டிசம்பர் மாதம் திடீரென காணாமல் போய்விட்டார்.

கடந்த 2 மாதத்துக்கு மேலாக அவரை பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில், நாம்தேவ் சவான் கொலை செய்யப்பட்டு உடல் அவரது வீட்டுக்குள்ளேயே புதைத்து வைக்கப்பட்டு உள்ளதாக நேற்றுமுன்தினம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

உடனே போலீசார் அவரது வீட்டுக்குச் சென்று தோண்டி பார்த்தனர். அப்போது, வீட்டில் ஒரு இடத்தில் 2½ அடி ஆழத்தில் நாம்தேவ் சவானின் உடல் புதைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், நாம்தேவ் சவானை அவரது 16 வயது மகன் அடித்து கொன்று உடலை புதைத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

போலீசார் தந்தையை கொன்று புதைத்த 16 வயது சிறுவனை போலீஸ் நிலையத்துக்கு பிடித்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv